திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம்: Difference between revisions
m (→தொன்மம்) |
|||
Line 13: | Line 13: | ||
'''இடைகாடர் கதை''': இடைகாடன் என்னும் இடையர் ஜாதி இளைஞன் பொதிய மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நவசித்தர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர்கேட்க இடையன் ஆட்டுபால் கொடுத்தான். சித்தர் நன்றி கடனாக சித்துகளை சொல்லிகொடுத்தார். | '''இடைகாடர் கதை''': இடைகாடன் என்னும் இடையர் ஜாதி இளைஞன் பொதிய மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நவசித்தர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர்கேட்க இடையன் ஆட்டுபால் கொடுத்தான். சித்தர் நன்றி கடனாக சித்துகளை சொல்லிகொடுத்தார். | ||
சித்தரான இடைகாடர் | சித்தரான இடைகாடர் பஞ்சம் வரப்போவதை முன்பறிந்தார். தன் ஆடுகளுக்கு எருக்கிலை தின்ன பழக்கினார். குரு விரகு என்னும் தனியத்தை மண்ணுடன் கலந்து வீடு கட்டிக்கொண்டார். மழையில்லாமல் பஞ்சம் வந்தபோது ஆடுகள் எருக்கை தின்று வாழ்ந்தன. எருக்கை தின்று ஆடுகளுக்கு அரிப்பு வந்து இடைகாடர் கட்டிய வீட்டில் உடம்பை தேய்த்தன. சுவரிலிருந்து விழுந்த குருவரகினை உண்டு வாழ்ந்தார் இடைகாடர். | ||
நவகிரக அதிபதிகள் பெருபஞ்சத்தில் உயிர் வாழும் ஆடுகளையும் இடைகாடரையும் பார்க்க வந்தனர். அவர்களை உபசரித்து குருவரகு கலந்த ஆட்டு பாலை குடிக்க கொடுத்தார். பாலை குடித்த நவகிரகங்கள் மயங்கின. இடைகாடர் அவற்றை மாற்றி கிடத்தியதும் மழை பெய்தது. | |||
திருவிடைகோடு என்னும் பெயரை பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைகாடருடன் இணைத்த இந்த தொன்மம் வாய்மொழி கதையாக உள்ளது. திருவிடைக்கோடு ஊரில் உள்ள மலை இடைகாடர் மலை என்றும் குளம் இடைகாடர் குளம் என்றும் அழைக்கபடுகிறது. ஊர் சாஸ்தா கோவிலை இடைகாடர் சமாதி என்றும் வாய்மொழி செய்தி உண்டு. | |||
'''சடையப்பர் கதை''': | |||
== கோவில் அமைப்பு == | == கோவில் அமைப்பு == |
Revision as of 10:02, 8 March 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
This page is being created by User:Arulj7978
கன்னியாகுமரி மவட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் திருவிடைகோடு கிராமத்தில் உள்ள சிவ ஆலயம். மூலவர் மகாதேவர் என்று அழைக்கப்படும் சடையப்பர். சிவாலய ஓட்டம் நிகழும் பன்னிரு சிவாலயங்களில் ஒன்பதாவது ஆலயம்.
இடம்
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் வில்லுகுறி பஞ்சாயத்தில் உள்ளது திருவிடைகோடு. திருவிடைகோடு ஊரில் வில்லுகுறி கால்வாயை ஒட்டி ஆலயம் உள்ளது. நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் வில்லுகுறியிலிருந்து கால்வாயை ஒட்டி கிழக்கே சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளது.
மூலவர்
திருவிடைகோடு ஆலய மூலவர் மகாதேவர் என்று பரவலாக அறியப்பட்டாலும் ஆதாரபூர்வமான பெயர் சடையப்பர். மூலவர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யபட்டு லிங்க வடிவில் உள்ளார்.
தொன்மம்
இடைகாடர் கதை: இடைகாடன் என்னும் இடையர் ஜாதி இளைஞன் பொதிய மலை அடிவாரத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நவசித்தர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர்கேட்க இடையன் ஆட்டுபால் கொடுத்தான். சித்தர் நன்றி கடனாக சித்துகளை சொல்லிகொடுத்தார்.
சித்தரான இடைகாடர் பஞ்சம் வரப்போவதை முன்பறிந்தார். தன் ஆடுகளுக்கு எருக்கிலை தின்ன பழக்கினார். குரு விரகு என்னும் தனியத்தை மண்ணுடன் கலந்து வீடு கட்டிக்கொண்டார். மழையில்லாமல் பஞ்சம் வந்தபோது ஆடுகள் எருக்கை தின்று வாழ்ந்தன. எருக்கை தின்று ஆடுகளுக்கு அரிப்பு வந்து இடைகாடர் கட்டிய வீட்டில் உடம்பை தேய்த்தன. சுவரிலிருந்து விழுந்த குருவரகினை உண்டு வாழ்ந்தார் இடைகாடர்.
நவகிரக அதிபதிகள் பெருபஞ்சத்தில் உயிர் வாழும் ஆடுகளையும் இடைகாடரையும் பார்க்க வந்தனர். அவர்களை உபசரித்து குருவரகு கலந்த ஆட்டு பாலை குடிக்க கொடுத்தார். பாலை குடித்த நவகிரகங்கள் மயங்கின. இடைகாடர் அவற்றை மாற்றி கிடத்தியதும் மழை பெய்தது.
திருவிடைகோடு என்னும் பெயரை பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைகாடருடன் இணைத்த இந்த தொன்மம் வாய்மொழி கதையாக உள்ளது. திருவிடைக்கோடு ஊரில் உள்ள மலை இடைகாடர் மலை என்றும் குளம் இடைகாடர் குளம் என்றும் அழைக்கபடுகிறது. ஊர் சாஸ்தா கோவிலை இடைகாடர் சமாதி என்றும் வாய்மொழி செய்தி உண்டு.
சடையப்பர் கதை:
கோவில் அமைப்பு
பூஜைகளும் விழாக்களும்
வரலாறு
உசாத்துணை
- புகைப்படங்கள் உதவி நன்றி https://shivantemple.blogspot.com/2019/07/9.html
- சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
- தென்குமரி கோவில்கள், முனைவர் அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், இரண்டாம் பதிப்பு 2018.
- https://490kdbtemples.org/about/kumari-shivalayam-ottam/
- குமரி மாவட்ட தேவச கோவில்கள் - இணையதளம்
- https://shaivam.org/hindu-hub/temples/place/669/thiruvidaikodu-chadayappar-temple-tamil