தாரகைமாலை
From Tamil Wiki
Revision as of 18:44, 5 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
தாரகைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இப்பெயர் கொண்ட சிற்றிலக்கியம் குறித்து இரண்டு வகையான இலக்கணங்கள் பாட்டியல் நூல்களில் காணப்படுகின்றன. அருந்ததியை ஒத்த மகளிரின் கற்பின் சிறப்புப் பற்றிப் பாடுவது தாரகைமாலை எனச் சில பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1][2]. ஆனால், அசுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களின் சிறப்புக்களைக் கூறுவது தாரகைமாலை என்பது வேறு சில பாட்டியல் நூல்களின் இலக்கணம்[3][4].
அடிக்குறிப்புகள்
- ↑
வகுப்பால் கற்புடை மகளிர்க்கு உள்ள
தகைத்திறம் கூறுதல் தாரகை மாலை- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 867
- ↑ இலக்கண விளக்கம், வெண்பாப் பாட்டியல், பிரபந்த தீபிகை, முத்துவீரியம் என்பவை இவற்றுள் சில.
- ↑
தாரகை இருபத் தேழையும் தகைபெற
சொல்லணி வகுப்பில் தூசி அணிதக
வழுத்துதல் தாரகை மாலை என்ப- பிரபந்த மரபியல் 36
- ↑ பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் என்பவை இவற்றுள் சில
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page