being created

கோ. வில்வபதி

From Tamil Wiki
Revision as of 11:13, 20 February 2024 by Tamizhkalai (talk | contribs) (Created page with " கோ. வில்வபதி(ஜூன் 12, 1921- அக்டோபர் 5, 1991) தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர். == பிறப்பு,கல்வி == கோ. வில்வபதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் கோவிந்தசாமி -அபரஞ்சி இணையருக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோ. வில்வபதி(ஜூன் 12, 1921- அக்டோபர் 5, 1991) தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர்.

பிறப்பு,கல்வி

கோ. வில்வபதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் கோவிந்தசாமி -அபரஞ்சி இணையருக்கு ஜூன் 12, 1921 அன்று பிறந்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கோ. வில்வபதி சென்னை, இந்து தியலாஜிகல் மேனிலைப் பள்ளியில் 37 ஆண்டுக்காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் தலைமையில்தான் மாணவர் மன்றப் பொன் விழா, மயிலை சிவமுத்து சிலை திறப்பு விழா, கட்டடத் திறப்பு விழா போன்ற விழாக்கள் நடைபெற்றன.

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கும் கம்பராமாயணத்தின் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழுதியுள்ளார். காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியின் மாறுதலையும் வளர்ச்சியையும் உணர்ந்து, தம் உரையில் உரிய எடுத்துக்காட்டுகளையும் தேவையான மேற்கோள் களையும் குறிப்பிட்டு எழுதுவது கோ. வில்வபதியின் தனித்திறனாகும்.

மாணவர் மன்றத்தின் தலைவராக தொண்டு செய்த மயிலை சிவமுத்து வில்வபதியை மன்றக் கண்மணி என்றும் உரைமணி என்றும் பாராட்டிச் சிறப்பித்துள்ளார்.

புலவர் கோ. வில்வபதி செந்தமிழ்ச்செம்மல், பெரும்புலவர் கோ.வில்வபதி என்று பல பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டார்.தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் நூலாசிரியராகவும் மேலாய்வாளராகவும் பணிபுரிந்தார். நித்திலக் குவியல் என்னும் திங்கள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளா

எழுதிய நூல்கள்[தொகு]

  1. சிலையாகி நிற்கும் செம்மல்கள்
  2. காவிரி
  3. நன்னெறி கதைகள்
  4. கம்ப இராமாயணம் பால காண்டம் தெளிவுரை
  5. முல்லை பாட்டு இனிய எளிய உரை.
  6. குறள் விளக்க கதைகள்.
  7. திருக்குறள் விளக்கவுரை
  8. மூவர் தமிழ் வாசகம்
  9. கௌதம புத்தர் (நாடகம்)
  10. மூவர் தமிழ் இலக்கணம்
  11. முல்லைப்பாட்டு –இனிய எளிய உரை
  12. நன்னூல் மூலமும் உரையும்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.