under review

காசியபன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
Tag: Reverted
(Corrected error in line feed character)
Tag: Manual revert
Line 6: Line 6:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் 53வது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.
காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் 53வது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.
காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதினார்.
காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதினார்.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார்.  
”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார்.  
"எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன்.
"எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன்.
'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்னன் குறிப்பிடுகிறார்.<ref>[https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/ சிதறி வீழ்ந்த நட்சத்திரம். – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)]</ref>
'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்னன் குறிப்பிடுகிறார்.<ref>[https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/ சிதறி வீழ்ந்த நட்சத்திரம். – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)]</ref>
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 23: Line 26:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Revision as of 20:11, 12 July 2023

To read the article in English: Kasiyaban. ‎

காசியபன்

காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) தமிழில் கவிதைகளும், அசடு என்னும் நாவலும் எழுதிய எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி.

பிறப்பு, கல்வி

காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தி தமிழை இரண்டாமொழியாக எடுத்து படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும்.

இலக்கிய வாழ்க்கை

காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் 53வது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.

காசியபனின் அசடு நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருடத்திற்கு பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பிற்கு நகுலன் முன்னுரை எழுதினார்.

இலக்கிய இடம்

”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.

"எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன்.

'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்னன் குறிப்பிடுகிறார்.[1]

நூல் பட்டியல்

நாவல்
  • அசடு (1978)
  • கிரகங்கள் (1980)
  • வீழ்ந்தவர்கள்
பிற
  • பேசாத மரங்கள் (கவிதை தொகுதி)
  • கோணல் மரம் (சிறுகதைகள்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page