காக்கைப்பாடினியார்: Difference between revisions
No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 25: | Line 25: | ||
* [https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=101 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி, தமிழ் இணைய கல்விக் கழகம்] | * [https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=101 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 02:15, 4 November 2023
காக்கைப்பாடினியார் (பொ.யு. ஆறாம் நூற்றாண்டு) காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை எழுதியவர். காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இளங்காக்கைப்பாடினியார் ஏன்ற புலவர் யாப்பிலக்கண நூலொன்றை எழுதினார்.
பார்க்க: காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
வாழ்க்கைக் குறிப்பு
காக்கைபாடினியம் இயற்றிய காக்கைப்பாடினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.
இலக்கிய வாழ்க்கை
காக்கைப்பாடினியார் காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார். இந்நூலின் ஒரு பகுதியே இதுவரை கிடைத்துள்ளது. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.
தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலக்காரிகைக்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. யாப்பருங்கலமும், காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுகின்றன.
தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலுள் தொகுத்து
என்று காக்கைபாடினியாரைப் புகழ்ந்துரைக்கிறது.
உசாத்துணை
- காக்கைபாடினியம்-தமிழ் இணைய கல்விக் கழகம்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page