இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2004
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுத்திய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2004
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | பூமிநிலை அறிக்கை | எஸ். சங்கரநாராயணன் | கல்கி |
பிப்ரவரி | அஸ்தமனம் | பொன்னீலன் | கல்கி |
மார்ச் | முனி விரட்டு! | என். ஶ்ரீராம் | ஆனந்த விகடன் |
ஏப்ரல் | ஓடாதே! | கிருஷ்ணா | கல்கி |
மே | உங்க பேர் என்ன? | ஆரணி யுவராஜ் | கல்கி |
ஜூன் | கழிவு | ஆண்டாள் பிரியதர்ஷினி | ஆனந்த விகடன் |
ஜூலை | டாக்ஸி டிரைவர் | ஆனந்த் ராகவ் | கலைமகள் |
ஆகஸ்ட் | ஞானாசிரியன் | தாமரை செந்தூர்பாண்டி | ஆனந்த விகடன் |
செப்டம்பர் | பொம்மக்கா | கௌதம சித்தார்த்தன் | தீராநதி |
அக்டோபர் | ஒரு இண்டர்வியூவில்... | ஜே.வி. நாதன் | ஆனந்த விகடன் |
நவம்பர் | காத்திருப்பவள் | பாவண்ணன் | புதிய பார்வை |
டிசம்பர் | பிறந்த மண் | எட்டயபுரம் ராஜன் | கலைமகள் |
2004 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை
2004 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘கழிவு’ தேர்ந்தெடுக்கப்பட்டது. திருப்பூர் கிருஷ்ணன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை பாரதி தேவராஜ் தேர்வு செய்தார்.
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.