இருபா இருபது (சிற்றிலக்கிய வகை)
From Tamil Wiki
To read the article in English: Irupa Irupathu.
இருபா இருபது தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இது, பத்து வெண்பாக்களையும், பத்து ஆசிரியப்பாக்களையும் கொண்டு இருபது பாடல்களால் அமைவது. பாடல்கள் அந்தாதியாக அமைந்திருக்கும்[1].
குறிப்புகள்
- ↑ முத்துவீரியம், பாடல் 1089
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page