under review

108 சிவ தாண்டவ விளக்கம்-தாலபுஷ்பபுடம்

From Tamil Wiki
Revision as of 21:35, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தாலபுஷ்பபுடம் (மலரிடுகை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள், 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - தாலபுஷ்பபுடம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தாலபுஷ்பபுடம். தமிழில் இது 'மலரிடுகை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே முதல் கரணம்.

சிவனின் ஆடல்

இடது பக்கத்து மார்பிற்கு நேராக, புஷ்பபுட முத்திரை என்பதனைப் பிடித்து, கால் நுனிகளால் சஞ்சரிப்பவராக, சிறிது வணங்கிய பக்கத்தை உடையவராகச் சிவபெருமான் ஆடிய ஆடல் தாலபுஷ்பபுடம். புஷ்பபுடத்தோடு இடது பக்கமாக இருப்பதால், இது தால புஷ்பபுடம் (இரட்டைக் கை முத்திரை) என்று அழைக்கப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:25:55 IST