under review

பூங்கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 13:56, 23 January 2025 by SakthivelS (talk | contribs) (Created page with "பூங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== பூங்கண்ணனார் சங்க காலப் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பூங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பூங்கண்ணனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 253 வது பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டுவதன் பொருட்டு பிரிந்து சென்ற தலைவனை நினைத்து துன்பத்தில் வருந்தும் தலைவியை ஆற்றுப்படுத்த தோழி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • ஆடவர் பொருளீட்ட செல்லும் வழியானது ஓங்கி உயர்ந்த மலைகளால் சூழப்பெற்று மூங்கில்கள் ஒன்றுடொனொன்று உரசும் ஒலியை எழுப்பும் காடாகும். அவ்வழி செல்லும் ஆடவர் தன் இறைச்சி உணவை பதுக்கி சாப்பிட்டுவிட்டு புலி தங்கி சென்ற குகையில் இரவு பொழுதில் பாதுகாப்பிற்காக தங்கி தங்கள் பயணத்தை தொடர்வர்.
  • ஆடவரை பிரிந்த மகளிர் தமது மென்பட்டாலான படுக்கையில் வீழ்ந்து துயரத்தால் கண்ணீர் வடிப்பர்.
  • மனைவி மக்கள் தனது பிரிவால் வருந்துவது அறிந்த ஆடவர் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான பொருளை ஈட்டாது திரும்பி விடுவதால், அவர்களுக்கு மனைவி மக்களின் பிரிவு துயரத்தை தூது செய்தியாக அனுப்புவதில்லை.

பாடல் நடை

குறுந்தொகை - 253

  • திணை: பாலை
  • துறை: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.


கேளா ராகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற்
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ
ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற்
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை
ஆறுசென் மாக்கள் சேக்கும்
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.