ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் மற்றும் பண்பாட்டு வெளியில் இயங்குபவர்
பிறப்பு,கல்வி
1954-ல் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரஸ்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்தார். தந்தை சண்முகம் ஓர் எழுத்தாளர். சகோதரர் எழுத்தாளர் கோணங்கி.மேட்டுப்பட்டியில் பள்ளிப்படிப்பையும், கோவில்பட்டியில் கல்லூரி படிப்பையும் முடித்தார்.
தனி வாழ்க்கை
அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் பணியாற்றினார். மனைவி இரா.வெள்ளதாய். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மகன் சித்தார்த் சென்னையில் வசிக்கிறார். என மாறி மாறி பணியாற்றியவர். படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமுஎகச அமைப்பு பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதறகாக அஞ்சலகபணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு வீச்சில் இயக்கியவர்.
இலக்கியப் பணி
சமுதாயப் பணி