108 சிவ தாண்டவ விளக்கம்-அவகித்தகம்
From Tamil Wiki
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - அவகித்தகம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அவகித்தகம். தமிழில் இது 'நெகிழாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது தொண்ணூற்றி ஐந்தாவது கரணம்.
சிவனின் ஆடல்
ஜநிதத்தைப் போல நின்று, கைகளை மார்புக்கு நேரே மடக்கி, நெற்றி, மார்புக்கு நேராக முறையே பிடித்து, தளிர் ஒன்றுக்கொன்று நேராக இருப்பது போலக் கைகளை அமைத்தும் அல்லது கிளிமூக்கைப்போலக் கைளை மார்புக்கு நேரே அணைத்து நின்று ஆடுவது அவகித்தகம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Nov-2023, 10:40:17 IST