108 சிவ தாண்டவ விளக்கம்-நிருத்தகம்
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - நிருத்தகம்
சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று நிருத்தகம். தமிழில் இது 'உட்கொடு தட்டுத்தாள்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஒன்பதாவது கரணம்.
சிவனின் ஆடல்
தன் தோளுக்கும், தலைக்கும் இடையில் கைகளைத் தூக்கியும் தாழ்த்தியும், கால்களையும் அவ்வாறே செய்து ஆடுவது நிருத்தகம். கைகளால் செய்யப்பெறும் நிகுட்டம், அலபல்லவ முத்திரையோடு கூடிய, கையில் சிறுவிரலைத் தூக்குதலும், தாழ்த்தலுமாகிய முறை. கால்கள் உத்கட்டித பாதத்தில் இருக்க வேண்டும். அதாவது கால்நுனியில் நின்று குதிகாலைப் பூமியில் தட்டி நிற்பது. அங்ஙனம் தட்டும்போது இடது கையை உயர்த்தும்போதும் தாழ்த்தும்போதும் வலதுகையையும், இடது குதிகாலையும், வலது கையை உயர்த்தும்போதும், தாழ்த்தும்போதும் வலது குதிகாலையும் தட்டவேண்டும்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
09-Oct-2023, 09:29:27 IST