first review completed

நாஞ்சில்நாடன் விருது

From Tamil Wiki
Revision as of 10:04, 8 January 2024 by Jayashree (talk | contribs)
ஓவியர் ஜீவா மற்றும் நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் விருது, கோவை சிறுவாணி வாசகர் மையம் இலக்கிய அமைப்பு வழங்கும் விருது. 2018 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

முனைவர் ப. சரவணன் விருது பெறுகிறார் (2019)

நாஞ்சில்நாடன் விருது

கலை, இலக்கியம் சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம், 2018 -ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.

இவ்விருது, பரிசுத் தொகை ரூபாய் 50,000/-, கேடயம் மற்றும் சான்றிதழ் கொண்டது.

அருட்செல்வப் பேரரசன் விருது பெறுகிறார் (2023)

நாஞ்சில்நாடன் விருது பெற்றவர்கள்

ஆண்டு விருதாளர் இலக்கியச் செயல்பாடு
2018 ஜீவா ஓவியர், வடிவமைப்பாளர், எழுத்தாளர்
2019 முனைவர் ப. சரவணன் எழுத்தாளர், ஆய்வாளர்
2020 கா.சு. வேலாயுதன் எழுத்தாளர், இதழாளர்
2021 மணல்வீடு ஹரிகிருஷ்ணன் எழுத்தாளர், இதழாளர், நாட்டுப்புறக் கலைஞர், ஆய்வாளர்
2022 'கௌசிகா' செல்வராஜ் சமூகசேவகர், களச் செயல்பாட்டாளர்
2023 அருட்செல்வப் பேரரசன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வடிவமைப்பாளர்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.