under review

சிறுகுடிகிழான் பண்ணன்

From Tamil Wiki
Revision as of 07:28, 16 November 2023 by Tamizhkalai (talk | contribs)

சிறுகுடிகிழான் பண்ணன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். சிறுகுடி என்னும் ஊரை ஆட்சி செய்தான்.

வாழ்க்கைக்குறிப்பு

சிறுகுடிகிழான் பண்ணன் சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்த சிறுகுடி என்னும் ஊரை ஆண்டான். சிறுகுடி நீர் வளத்தால் செழிப்பாக அமைந்த நாடு. சிறுகுடிகிழான் பண்ணன் வள்ளல் தன்மை உடையவன். சோழன் கிள்ளிவளவன் இவன் காலத்தில் வாழ்ந்தான். இவனுடைய கொடைத்தன்மையை அறிந்து ”யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” என்று வாழ்த்தினான்; “பசிப்பிணி மருத்துவன்” என்றும் பாராட்டினான்.

சிறப்புப் பெயர்கள்

உசாத்துணை


✅Finalised Page