சிறுகுடிகிழான் பண்ணன்
From Tamil Wiki
சிறுகுடிகிழான் பண்ணன் சங்ககாலத்தில் வாழ்ந்த சீறூர் மன்னர்களில் ஒருவன். சிறுகுடி என்னும் ஊரை ஆட்சி செய்தான்
வாழ்க்கைக்குறிப்பு
சிறுகுடிகிழான் பண்ணன் சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் அமைந்த சிறுகுடி என்னும் ஊரை ஆண்டான். சிறுகுடி நீர் வளத்தால் செழிப்பாக அமைந்த நாடு. வள்ளல் தன்மை உடையவன். சோழன் கிள்ளிவளவன் இவன் காலத்தில் வாழ்ந்தான். இவனுடைய கொடைத்தன்மையை அறிந்து ”யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” என்று வாழ்த்தினான்; “பசிப்பினி மருத்துவன்” என்றும் பாராட்டினான்.
சிறப்புப் பெயர்கள்
- கைவள் ஈகைப் பண்ணன் (புறம் 70, கோவூர்க்கிழார்)
- கொடைமேந் தோன்றல் (புறம் 388, மள்ளனார்)
- தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் (அகம் 54, கொற்றங்கொற்றனார்)
உசாத்துணை
- சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்
- சிறுகுடிக்கிழான் பண்ணன்: தினமணி
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.