being created

ஊட்டியார்

From Tamil Wiki
Revision as of 14:13, 27 October 2023 by Ramya (talk | contribs) (Created page with " ஊட்டியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று == வாழ்க்கைக் குறிப்பு == ஊட்டியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஊட்டியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று 

வாழ்க்கைக் குறிப்பு

ஊட்டியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்களாக இரண்டு பாடல்கள் உள்ளன. அகநானூறு 68, 388 எண்ணுள்ள பாடல்களாக இவை அமைந்துள்ளன. இரண்டும் குறிஞ்சித் திணைப் பாடல்கள்.

பெயர் விளக்கம் இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்த ஆசிரியர் இவரது பாடலிலுள்ள அரிய சொல்லைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார். மகளிர் தம் பாதத்துக்கு மேல் உள்ள விளிம்புகளில் சிவப்புச்சாயம் ஏற்றி ஒப்பனை செய்துகொள்வர். அழகணம் என்றும் மருதாணி என்றும் சொல்லப்படும் மருத்தோன்றி இலையை அரைத்துப் பூசி அப்பகுதியில் சிவப்புச்சாயம் ஏற்றுவர். உள்ளங்கைகளிலும் இந்த வகையில் சாயம் ஏற்றிக்கொள்வர். இப்படிச் சாயம் ஊட்டிக்கொள்ளும் பழக்கம் சங்ககாலத்திலும் இருந்தது. இதனை 'ஊட்டி' என்னும் சொல்லால் வழங்கினார்

இந்தப் புலவர் ஊட்டி என்னும் சொல்லைத் தன் இரண்டு பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார்.

'ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை' என்பது ஒரு பாடலில் உள்ள அடி. செயலை என்னும் அசோகமரத்தின் தளிர் ஊட்டி போல் நிறம் பெற்றிருந்ததாம். 'ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பு' என்பது மற்றொரு பாடலில் உள்ள அடி. வேட்டைக்குச் செல்வோரின் அம்புநுனி ஊட்டி போல் நிறம் பெற்றிருந்ததாம்.

இலக்கிய வாழ்க்கை

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

காதலன் காதலியை நாடி இரவில் வந்திருப்பதை அறிந்த தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள். 1 தாயே! வாழ்க. இதைக் கேட்க வேண்டும் தாயே. நம் தோட்டத்து ஈர நிலத்தில் மண்டிக்கிடக்கும் கூதளம் பூச்செடி குழையும்படி இன்னிசையுடன் கொட்டி அருவி பாடும் என்பதைக் கேட்டிருக்கிறாயா? அது நிகழ்வது போல அவர் வந்திருக்கிறார். வாழ்க. இதைக் கேட்க வேண்டும் தாயே. 2 காலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போன்ற சிவப்பு நிறத்துடன் தளிர் கொண்டிருக்கும் அசோக மரத்தில் நாம் ஆடிய பின்னர் வெறுமனே தொங்கும் ஊஞ்சல் கயிற்றைப் பார்த்துப் பாம்பு தொங்குகிறது என்று எண்ணி இடியானது அதனைத் தாக்கும். இதனைக் கேட்டிருக்கிறாயா? 3 மேலும் ஒன்று கேட்டிருக்கிறாயா? இந்த எந்தச் செய்தியையும் அறியாமல் நம் அன்னை நல்ல தூக்கத்தில் இருக்கிறாள். அத்துடன் ஊரின் ஆரவாமும் அடங்கிவிட்டது. “காதலர் வரின் இது தக்க பருவம்” என எண்ணுகிறாய். 4 உன் எண்ணம் பழுது போகாமல் அவர் வந்திருக்கிறார். உன் வளையல் கழலும்படிப் பிரிந்திருந்த அவர் வந்திருக்கிறார். 5 இடி முழக்கத்துடன் மேகக் கூட்டம் மழை பொழிந்திருக்கிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தைக் கடந்து யானைக் குடும்பம் செல்கிறது. குழந்தை யானையால் கால் ஊன்றி நடக்க முடியவில்லை. பெண்யானைகள் பல செல்கின்றன. வெள்ளைக் கொம்புகளைக் கொண்ட ஆண்யானை ஒலி எழுப்பி அழைத்துக்கொண்டு செல்கிறது. பகலிலும் அஞ்சத் தக்க மலைப்பாம்பை (பாந்தள்) வெள்ளம் அடித்துக்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட காட்டுவழியில் அவர் வந்திருக்கிறார். நீ அவருக்கு உன்னைத் தருவாயாக.


2nd

பாடல் நடை

  • அகநானூறு 68

திணை குறிஞ்சி
அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ? எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவர்ஆயின், பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.

  • அகநானூறு 388

அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,

மை ஈர் ஓதி மட நல்லீரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று? என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,

நன்னர் நெஞ்சமொடு மயங்கி, வெறி என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
தணி மருந்து அறிவல் என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி,
வேட்டம் செல்லுமோ, நும் இறை? எனவே?

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.