under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கிருத்ராவலீனகம்

From Tamil Wiki
Revision as of 19:52, 9 October 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கிருத்ராவலீனகம் (கலுழவியக்கம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, கிருத்ராவலீனகம். தமிழில் இது கலுழவியக்கம் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

இடது காலைப் பின்புறமாக வளைத்து, வலது காலைத் தூக்கி முன் வைத்து, கைவீசி நின்று ஆடுவது கிருத்ராவலீனகம்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.