under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கூர்ணிதம்

From Tamil Wiki
Revision as of 10:11, 9 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
கூர்ணிதம் (சுழலகம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கூர்ணிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கூர்ணிதம். தமிழில் இது 'சுழலகம்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்தியிரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கையைப் பக்கவாட்டாக உயர்த்தித் திருப்பி, இடது கையைத் தோலஹஸ்தமாகத் தொங்க விட்டு, ஸ்வஸ்திக நிலையிற் பிரிந்தது போல் பாதத்தை வைத்து ஆடுவது கூர்ணிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page