under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ஸ்கலிதம்

From Tamil Wiki
Revision as of 08:55, 23 November 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
ஸ்கலிதம் (நழுவகற்சி)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ஸ்கலிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, ஸ்கலிதம். தமிழில் இது 'நழுவகற்சி' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி ஆறாவது கரணம்.

சிவனின் ஆடல்

இடது காலைச் சம பாதமாகவும், வலது காலை வளைத்தும், வலது கையை ஹம்ஸ பட்சமாகவும், இடது கையைத் தொங்கவிட்டும், மாறிமாறி ஆடுவது ஸ்கலிதம்.

உசாத்துணை


✅Finalised Page