under review

108 சிவ தாண்டவ விளக்கம்-குஞ்சிதம்

From Tamil Wiki
Revision as of 11:06, 30 December 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: Category:Tamil content)
குஞ்சிதம் (நொசிப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - குஞ்சிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று குஞ்சிதம். தமிழில் இது 'நொசிப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தியிரண்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

முதலில் வலது காலை வளைத்து, வலது கையையும் வளைத்து, இடது காலைத் தூக்கி நின்று ஆடுவது குஞ்சிதம்.

உசாத்துணை


✅Finalised Page