under review

108 சிவ தாண்டவ விளக்கம்-வியம்ஸிதம்

From Tamil Wiki
Revision as of 03:11, 27 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
வியம்ஸிதம் (அகல்நடம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - வியம்ஸிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று வியம்ஸிதம். தமிழில் இது 'அகல் நடம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

வளைந்த வலது காலை ஐந்தடி அகற்றி வைத்து நிற்கும் ஆலீட ஸ்தானத்தில் நின்று, கைகளை மார்பிற்கு நேரே மடக்கிப் பிடித்து, மேலும் கீழுமாகச் சுழன்று ஆடுவது வியம்ஸிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page