108 சிவ தாண்டவ விளக்கம்-உத்கட்டிதம்
From Tamil Wiki
Revision as of 23:08, 17 November 2023 by Tamizhkalai (talk | contribs)
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - உத்கட்டிதம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று உத்கட்டிதம். தமிழில் இது 'அடியொட்டாடல்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நூற்றி மூன்றாவது கரணம்.
சிவனின் ஆடல்
பாதங்களைச் சதுரம்பட வளைத்து முன் காலால் நின்றும் கைகளைத் தலசங்கட்டிதமாக வைத்தும் பக்கத்தைச் சிறிது வணங்கி நின்று ஆடுவது உத்கட்டிதம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page