108 சிவ தாண்டவ விளக்கம்-கஜகிரீடிதகம்
From Tamil Wiki
Revision as of 10:11, 9 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: )
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - கஜகிரீடிதகம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கஜகிரீடிதகம். தமிழில் இது 'களிறாடல்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி எட்டாவது கரணம்.
சிவனின் ஆடல்
வளைந்து கட்டிய இடக்கையைக் காதுக்கு நேராகப்பிடித்து, வலது கையை லதா ஹஸ்தமாக அமைத்து, டோல பாதசாரியால் நின்று ஆடுவது கஜகிரீடிதகம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page