108 சிவ தாண்டவ விளக்கம்-பார்சுவநிகுட்டகம்
From Tamil Wiki
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - பார்சுவநிகுட்டகம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று பார்சுவநிகுட்டகம். தமிழில் இது 'சிறகு மெட்டு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி ஒன்பதாவது கரணம்.
சிவனின் ஆடல்
கைகளை ஸ்வஸ்திகமாகப் பக்கங்களில் அமைத்து நிகுட்டிதபாதமாக நின்று ஆடுவது பார்சுவநிகுட்டகம் என அழைக்கப்படுகிறது.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.