first review completed

108 சிவ தாண்டவ விளக்கம்-அர்க்கலம்

From Tamil Wiki
Revision as of 04:24, 7 October 2023 by Jayashree (talk | contribs)
அர்க்கலம் (தாள்ப்பாள்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - அர்க்கலம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று அர்க்கலம். தமிழில் இது 'தாள்ப்பாள்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி ஏழாவது கரணம்.

சிவனின் ஆடல்

கால்நுனியால் நின்று கொண்டு பின்புறமாகச் சாய்ந்து கைகளை தரையில் ஊன்றி வளைந்து நிற்பது அர்க்கலம். இந்நடனத்திற்கு ஒரே சமயத்தில் இருகைகளும் அலபல்லவமாகச் சிறிது முன் நீட்டப்பட்டதாக இருக்கவேண்டும்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.