first review completed

ரா.ஸ்ரீ. தேசிகன்

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
மழை இருட்டு (சிறுகதை)

ரா.ஸ்ரீ. தேசிகன் எழுத்தாளர். கவிஞர், கட்டுரையாளர், இலக்கியத்திறனாய்வாளர், விமர்சகர், தமிழ்ப்பேராசிரியர். நவீனத்தமிழ் இலக்கியத்தின் நேர்த்தியான விமர்சன முறைகளுக்கு வித்திட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

சக்தி, கலைமகள், சில்பஸ்ரீ, பாரதமணி போன்ற இதழ்களில் இவரின் சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. திறனாய்வு என்பதை தமிழ் இலக்கியத்தில் முன்னெடுத்தவர். புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு முதன் முதலாக வெளிவந்தபோது அதற்கு முன்னுரை எழுதி ஊக்கம் தந்தார். இவர் 1937-ல் எழுதிய குழந்தை ராமு சிறார்களுக்கான நூல். இந்நூல் சுதந்திரச் சங்கு காரியாலயத்தால் வெளியிடப்பட்டது.

கவிதைக்கலை பற்றி விரிவாக ஆராய்ந்து ஒப்பியல் நோக்கில் எழுதியிருக்கும் நூல் "கவிதைக்கலை-காலவெளியில் கவிதை நதிகள்". மாயசந்யாசி என்பது ஆண்டன் செகாவ் எழுதிய ரஷ்ய நாவலின் மொழிபெயர்ப்பு. 'மேலை நாட்டுத்தத்துவம்’ என்பது தத்துவங்கள் பற்றிய விளக்க நூல். ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சாதனை பற்றிய விளக்கத்தை 'சிந்தனை மணிகள்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.

நூல்கள் பட்டியல்

  • குழந்தை ராமு (சிறார் நூல்)
  • கவிதைக்கலை-காலவெளியில் கவிதை நதிகள்
  • மாயசந்யாசி
  • மேலை நாட்டுத்தத்துவம்
  • சிந்தனை மணிகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.