பெரிய திருமொழி
பெரிய திருமொழி திருமங்கையாழ்வார் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் இடம்பெறும் பிரபந்தம். 1084 பாசுரங்களைக் கொண்டது. வைணவ திவ்யதேசங்களுக்கு சென்று அங்கு கோவில் கொண்ட தெய்வத்தின்மீது பாடிய பாசுரங்களும், அகத்துறைப் பாடல்களும் கொண்டது.
ஆசிரியர்
பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர்.
பெயர்க்காரணம்
திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி, பெருமாள் திருமொழி, நாச்சியர் திருமொழி, திருவாய்மொழி என ஐந்து திருமொழிகள் உள்ளன. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் பாசுரங்களைக் கொண்டதால் பெரிய திருமொழி எனப் பெயர் வந்தது என அறிஞர்கள் கருதுகின்றனர்.
நூல் அமைப்பு
பெரிய திருமொழி நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் இரண்டாம் ஆயிரத்தில் , 948 முதல் 2031 வரையிலான பாடல்களாக இடம்பெற்றுள்ளது. 11 பத்துகளைக் கொண்டது. ஒவ்வொரு பத்தும் பத்து பாசுரங்களைக்கொண்ட பத்து திருமொழிகளால் ஆனது. பதினோராம் பத்து மட்டும் 8 திருமொழிகளைக் கொண்டது.
108 திருமொழிகள் ஒவ்வொன்றிலும் 10 பாசுரங்கள்.பத்தாம் பத்தின் ஏழாவது திருமொழியில் மட்டும் 14 பாசுரங்கள். 108*10 +4 =1084 பாசுரங்கள்.
பத்து பதிகங்கள் கொண்டது ஒரு பத்து.
எம்பெருமானார் இயற்றிய தனியன்
வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
முதல் பத்து
முதல்பத்தில் முதல் திருமொழி எட்டெழுத்து மந்திரத்தின், நாராயண நாமத்தின் பெருமையைப் பாடுகிறது. ஒவ்வொரு பாடலும் நாராயணா எனும் நாமமே என முடிவடைகிறது. அடுத்த ஒன்பது திருமொழிகள் திருப்பிரிதி(மானசரோவர்), திருவதரி, திருவதரிஆசிரமம், திருச்சாளக்கிராமம், நைமிசாரண்யம், சிங்கவேள் குன்றம், திருவேங்கடம்(4 திருமொழிகள்) ஆகிய திவ்யதேசங்களையும், அங்கு கோவில் கொண்ட பூசைத்திருமேனியயையும் பாடுபவை.
இரண்டாம் பத்து
இரண்டாம் பத்தில் உள்ள திருமொழிகள் திருவேங்கடம், திருஎவ்வுளூர்(திருவள்ளூர்), திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருக்கடல்மல்லை (2 திருமொழிகள்), திருவிடந்தை (தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இரங்கல்), திருவட்டபுயகரம் (தலைவனின் உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்கும், தாய்க்கும் சொல்வது), திருப்பரமேசுவர விண்ணகரம், திருக்கோவலூர் ஆகிய திருநான்காத்தலங்களைப் பாடுகிறார். அகத்துறைப் பாடல்களில் தன்னை பரகால நாயகியாகப் பாவித்து, நாயகி பாவத்தில் தன் பக்தியை வெளிப்படுத்துகிறார்.
மூன்றாம் பத்து
மூன்றாம் பத்தில் திருவயிந்திபுரம், தில்லைச் திருச்சித்ரகூடம்(2 திருமொழிகள்), திருக்காழிச் சீராம விண்ணகரம், திருவாலி (3 திருமொழிகள்), திருநாங்கூர் மணிமாடக்கோவில், திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம், திருநாங்கூர் அரிமேய விண்ணகரம் ஆகிய திருத்தலங்களைப் பாடியுள்ளார்.
நான்காம் பத்து
நான்காம் பத்தில் திருநாங்கூர் திருதேவனார்த்தொகை, திருநாங்கூர் வண்புருடோத்தமம், திருநாங்கூர் செம்பொன்செய்கோவில், திருநாங்கூர் தெற்றியம்பலம், திருநாங்கூர் திருமணிக்கூடம், திருநாங்கூர் காவளம்பாடி, திருநாங்கூர் திருவெள்லக்குளம், திருநாங்கூர் பார்த்தன்பள்ளி (தலைவியின் செயல் கண்டு ஆற்றாது நற்றாய் கூறல்) , திருஇந்தளூர், திருவெள்ளியங்குடி ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
ஐந்தாம் பத்து
ஐந்தாம் பத்தில் திருப்புள்ளப்பூதங்குடி, திருவரங்கம் (ஐந்து திருமொழிகள்), திருப்பேர்நகர், திருநந்திபுர விண்ணகரம் ஆகிய தலங்கள் பாடப்பட்டுள்ளன.
ஆறாம் பத்து
திருச்சாழல்
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. (1992 -2001). பக்தி இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியம் பயின்று வருவதற்கான சான்று.
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
உசாத்துணை
https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஆசிரியர்
பெரிய திருமொழியை இயற்றியவர் திருமங்கையாழ்வார். நீலன், பரகாலன், கலியன் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டவர். எம்பெருமானார் இயற்றிய தனியன்
வாழிபரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்வேந்தன் -வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள் எதிர் எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில் அமைந்தது திருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத் திருமங்கையாழ்வார் கையாள்கிறார் (1992 -2001). இது பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று,
வண்ணக் கருங்குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும்
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே!
தோழி, தாய், மகள் பாசுரங்கள்,தூது விளக்கங்கள் இந்த நூலிலேயே மிகவும் சிறந்த பகுதியாகும். பரகாலர் தாய் நிலையில் பாடுகையில் தம் மகளைக் கண்டு பேசுவதாகவும், அவள் நோய் பற்றி அறிய விரும்பு வதாகவும் திருமாலிடம் தம் மகளின் நிலையை எடுத்துப் பேசுவதாகவும், திருமாலோடு சென்ற மகளைக் குறித்து இரங்குவதாகவும் பல நிலைகளில் பாடுகின்றார். பரகாலர் தாய் நிலையிலிருந்து பாடும் திருப்பதிகள், திருவிடந்தை, திருவாலி, திருப்பார்த்தன்பள்ளி, திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருமாலிருஞ்சோலை, திருநெடுந்தாண்டகம் இடைப் பத்து (11, 20) நற்றாயாகவும், செவிலித் தாயாகவும் பாவித்துப் பாடும் பாடல்களின்
பொங்கத்தம் பொங்கோ’ என முடிகின்றன. இதை ஒரு சங்கேத ஒலிக் குறிப்பு என்பர். இலங்கையில் போர் நடந்து முடிகிறது இராவணன் மாண்டு போனான். மீண்டுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக இராமனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது இராமனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது.
தடம் பொங்கத்தம் பொங்கோ என்பது தோற்றவர்கள் பறையடித்து ஆடும் கூத்தாகும். தடம் என்பது இராமனின் பெருமையைக் குறிக்கும். பொங்க என்பது அப்பெருமை மேல் ஓங்க என்பதையும் பொங்கோ என்பது தங்களுக்கும் அப்பெருமை மேலோங்க வேண்டும் என்பதாகும்.
பத்தாம் பத்து குழமணி தூரம்
உசாத்துணை
https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2022-html-p202254-28726
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.