முத்துராசர்
முத்துராசர் (பதினேழாம் நூற்றாண்டு நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
முத்துராசர் சோழநாட்டின், உறையூர்ச் செந்தியப்பரின் மகன். யாழ்ப்பாணத்தில் தங்கி வாழ்ந்தார். முத்துராச கவிராசரின் காலத்தை உறுதியாகக் கூறும் சான்று எதுவுமில்லை. யாழ்ப்பாண வைபவ மாலை ஆசிரியர் மயில்வாகனப் புலவர் கைலாயமாலையை முதல் நூலாகக் கொண்டார் என வைபவ மா லையின் சிறப்புப் பாயிரம் கூறுவதால் இது கி. பி. 1736க்கு முன்னர் எழுதப்பட்டது என அறிஞர்கள் கருதுகிறனர். இராசநாயகம் கைலாயமாலை, ஆராய்ச்சி முன்னுரையில் ’1604 க்கும் 1619 க்கும் இடைப்பட்ட காலத்தில் (நல்லூர்க் கைலாசநாதர்) கோவிலுங் கட்டி நூலம் எழுதப்பட்டதெனக் கொள்ள வேண்டும்" என்கிறார். ஆனால் தமிழக ஆய்வாளர் சேஷாத்ரி அவர் பொயு பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துராசர் யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாற்றினைக் கூறுகின்ற 'கைலாய மாலை' நூலை எழுதினார். இந்நூல் கலிவெண்பாக்களால் இயற்றப்பட்டது. 1906-ல் ஆறுமுக நாவலரின் மருகர் த. கைலாச பிள்ளையால் பதிப்புக் குறிப்புகள் ஏதுமின்றி அச்சேற்றப்பட்டது.சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் யாத்த கைலாசப் பிள்ளையார் ஊஞ்சலும் இதனுடன் இணைத்து வெளி யிடப்பட்டது.
(பார்க்க கைலாய மாலை)
நூல் பட்டியல்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- முத்துராசரின் கைலாய மாலை. இணைய நூலகம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.