being created

பாலியர் நேசன் (இந்திய இதழ்)

From Tamil Wiki
Revision as of 21:08, 13 November 2022 by ASN (talk | contribs) (Para Added, Images Added, Inter Link Created;)
பாலியர் நேசன் - 125வது இதழ்
பாலியர் நேசன் இதழ்கள்
பாலியர் நேசன் இதழ் - 126வது வருடம்

‘பாலியர் நேசன்’ ஒரு சிறார் இதழ். 1891 முதல் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் இருந்து வெளிவந்தது. சிறார்களிடையே பைபிள் வாசிப்பைப் பரப்புதல், ஒழுக்கக் கல்வி, சமயக் கல்வி, நற்சிந்தனைகளை மேம்படுத்துதல் போன்றவற்றை கொள்கைகளாகக் கொண்டு இவ்விதழ் வெவந்தது. 125 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்த இதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் ரெவரெண்ட் ஆ. பாக்யராஜ்.

பிரசுரம், வெளியீடு

நற்போதகம் இதழைத் தொடர்ந்து, சிறார்கள் கிறிஸ்தவ ஒழுங்கிலும், பக்தியிலும் வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக, 1891-ல் தொடங்கப்பட்ட இதழ் பாலியர் நேசன். C.M.S பாலியர் பக்தி விருத்தி சங்கம் இதனை வெளியிட்டது. சி.எம்.எஸ். மிஷனரியாக இருந்த பாதிரியார்கள் பலர் இதன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். ஆரம்பத்தில் மும்மாத இதழாக வெளிவந்த பாலியர் நேசன், சிறார்களின் வரவேற்பைப் தொடர்ந்து மாத இதழானது.

125 ஆண்டுகளைக் கடந்த இன்றளவும் வெளிவந்து கொண்டிருக்கிறது பாலியர் நேசன் இதழ். 125-வது இதழின் முகப்பு அட்டையில் இதழின் தனிப்பிரதி ரூபாய் 10/- என்றும், ஆண்டுச் சந்தா ரூபாய் 100/- என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெவரெண்ட் ஆ. பாக்யராஜ் இதன் ஆசிரியராக உள்ளார்.

உள்ளடக்கம்

முற்கால இதழ்கள்

இதழின் வளர்ச்சியில் சாமுவேல் பாக்கிய நாதன், R.V. ஆசீர்வாம், S.G. மதுரம், ஞான சிகாமணி, G. தேவதாசன், ஹெர்க் லாட்ஸ் (B, Herklorts 1899), ஆரோன்ஸ்மித் (M.E, Arrowsinith 1904), சாமுவேல் பவுல் உள்ளிட்ட பலர் பங்களித்தனர். 1949-ம் ஆண்டு முதல் தினசரி தியான நாட்குறிப்பு அட்டை அச்சடிக்கப்பட்டு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒழுக்கக் கல்வி, சமயக் கல்வி, நற்சிந்தனைகள் அடங்கிய செய்திகள் பாலியர் நேசனில் வெளியாகின. ‘பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்' என்ற பாடலை சாமுவேல் பாக்கியநாதன் எழுதி பாலியர் நேசனில் வெளியிட்டார். இது சிறார்களின் கிறிஸ்து கீதமானது. மாணவ, மாணவியர் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் படி ஊக்குவிக்கப்பட்டனர். தரமானவை பாலியர் நேசன் இதழில் பிரசரிக்கப்பட்டதுடன், எழுதியவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது. சிறுவர்களின் வேத அறிவை ஊக்குவிக்கும் வகையில் பாலியர் நேசன் இதழில் வெளிவரும் வேத வினாக்களுக்கு ஒழுங்காகவும், சரியாகவும் விடை எழுதுவோருக்கு ஆண்டின் இறுதியில் சான்றிதழ் வழங்கும் முறை 1960-ல் கொண்டுவரப்பட்டது.

தற்கால இதழ்கள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.