being created

சமண திருவெம்பாவை

From Tamil Wiki
Revision as of 06:46, 28 August 2022 by Tamizhkalai (talk | contribs)

சமண திருவெம்பாவை அவிரோதிநாதர் இயற்றிய சமண தோத்திரப்பாமாலை. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையை அடியொற்றி, 'எம்பாவாய்; என முடியும் பாடல்களைக் கொண்டது. மார்கழி மட்டுமின்றி எல்லா காலத்திலும் வாசிக்கக் கூடிய ஒரு பாமாலை. இதில் தீர்த்தங்கரர்களைப் போற்றி பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆசிரியர்

இதனை இயற்றியவர் அவிரோதி நாதர். இவரை அவிரோதி ஆழ்வார் என்றும் அழைப்பர். சமணத் துறவிகள் ஊழ்கத்தில் ஆழ்ந்திருப்பதால் ஆழ்வார் என்ற சொல் அவர்களையும் குறிக்கும் எனக் [1]கருதப்படுகிறது. வைணவ சமயத்திலிருந்து மாறி, சமணக்கோட்பாட்டைப் பின்பற்றிய சமணர்.


இந்த நூல் 1963ல் அமரர் ஜீவபந்து அவர்களால் ஜினகாஞ்சி ஜைனத் தமிழ் இலக்கிய மன்றத்தினரால் புலவர் கு.பாலசுந்தர முதலியார் அவர்கள் உரையுடன் வெளியிடப்பட்டது. தொடர்ந்து 1977ல் தஞ்சை ஆதிபகவன் ஜைன சேவா சமாஜத்தினரால் வெளியிடப்பட்டது. குறிப்பாக வேறு பிரதிகளில் விடுபட்ட செய்யுட்களும் இந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் வருகின்ற முத்தென்ன வெண்ணகையாய்... வாழி அருகன் மலர்த்தாமரை போன்ற செய்யுட்கள் மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை நினைவிருத்துகின்றன. வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உசாத்துணை

சமண திருவெம்பாவை சமண திருவெம்பாவையின் இரு பாடல்கள்-youtube.com

அஹிம்சை யாத்திரை-சமண திருவெம்பாவை








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.