குறத்திப்பாட்டு
From Tamil Wiki
குறத்திப்பாட்டு தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில் அகவல், வெண்பா, தரவு, கொச்சகம்,கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் ஆகிய செய்யுள் வகைகள் இடம்பெறும். இடையே சிந்து போன்ற நாடகத் தமிழ் கூறுகளும் இடம் பெறலாம்.
குறத்திப்பாட்டு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலம் பற்றிக் கூறுவது[1].
குறத்திப்பாட்டு என்ற தலைப்பில் எந்த நூலும் கிடைக்கவில்லை. குறம், குறவஞ்சி ஆகிய தலைப்பில் உள்ள நூல்களே கிடைத்துள்ளன.[2] திரௌபதைக் குறம் இதன் இயல்புகளைக் கொண்ட மகாபாரத நாட்டார் கதைப் பாடல்.
அடிக்குறிப்புகள்
- ↑ இறப்புநிகழ் வெதிர்வென்னும் முக்காலமும் திறம்பட உரைப்பது குறத்திப் பாட்டே (பன்னிரு பாட்டியல் - பாடல் 217)
- ↑ தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
இதர இணைப்புகள்
✅Finalised Page