under review

குமாரநந்தன்

From Tamil Wiki
Revision as of 21:26, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added links to Disambiguation page)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: Kumaranandan. ‎

குமாரநந்தன்

குமாரநந்தன் (மே 20, 1973) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் பாலமுருகன். நாமக்கல் மாவட்டம் மல்லூருக்கு அருகேயுள்ள மேற்கு வலசு கிராமத்தில் கண்ணன், தனலட்சுமி தம்பதியினருக்கு மகனாக மே 20, 1973-ல் பிறந்தார். கிழக்கு வலசுக் குடியில் வளர்ந்தார். எம்.ஏ; தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மல்லூரில் டீக்கடை நடத்தி வருகிறார். மனைவி கவிதா, மகள்கள் வாசிகா மற்றும் ரேவா சாம்பவி, மகன் மகிழ் வண்ணன்.

இலக்கிய வாழ்க்கை

இவரின் முதல் சிறுகதை ’ஆன்மாவின் பயணம்' கணையாழி இதழில் வெளிவந்தது. 'பூமியெங்கும் பூரணியின் நிழல்' சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை Pale twilight என்ற பெயரில் வின்சென்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆதர்ச எழுத்தாளர்களாக தோப்பில் முகமது மீரான், மா. அரங்கநாதன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், தஞ்சை பிரகாஷ், தாஸ்தாயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், மிகையில் ஷோலகவ், அலெக்சாண்டர் குப்ரின் மார்க்வெஸ், தாக் ஸூல்ஸ்தாத் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். புதுக்கவிதைகளையும் சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதிவருகிறார்.

இலக்கிய இடம்

அன்றாடவாழ்க்கையில் உழலும் எளிய மனிதர்களின் சித்திரங்களை நேர்மையுடனும் வடிவநேர்த்தியுடனும் எழுதும் படைப்பாளியாக குமாரநந்தன் மதிப்பிடப்படுகிறார்.

பூமியெங்கும் பூரணியின் நிழல்

நூல் பட்டியல்

சிறுகதைகள்
  • பதிமூன்று மீன்கள்
  • பூமியெங்கும் பூரணியின் நிழல்
  • நகரப் பாடகன்
கவிதைத் தொகுப்பு
  • பகற் கனவுகளின் நடனம்
சிறுவர் கதைகள்
  • மேகலாவின் அற்புதத் தோட்டம்

உசாத்துணை

குமாரநந்தன் சிறுகதைகள்-சொல்வனம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:30 IST