தேவநேயப் பாவாணர் விருது
From Tamil Wiki
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களை, எழுத்தாளர்களை, கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவற்றுள் தேவநேயப் பாவாணர் விருதும் ஒன்று.
தேவநேயப் பாவாணர் விருது
தமிழ் வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் போற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் தகுதி வாய்ந்த அகராதியியல் அறிஞர் ஒருவருக்கு, 2020 முதல் ஆண்டுதோறும் ‘தேவநேயப் பாவாணர் விருது’ வழங்கப்படுகிறது.
இவ்விருது, விருதுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை கொண்டது.
தேவநேயப் பாவாணர் விருது பெற்றவர்கள்
| ஆண்டு | விருதாளர் பெயர் |
|---|---|
| 2020 | பேராசிரியர் கு. சிவமணி |
| 2021 | முனைவர் கு. அரசேந்திரன் |
| 2022 | முனைவர் இரா. மதிவாணன் |
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.