under review

108 சிவ தாண்டவ விளக்கம்-மண்டலஸ்வஸ்திகம்

From Tamil Wiki
Revision as of 03:11, 27 October 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
மண்டலஸ்வஸ்திகம் (உட்கொடு குறுக்கிடுகை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - மண்டலஸ்வஸ்திகம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவதாண்டவங்களில் ஒன்று மண்டல ஸ்வஸ்திகம். தமிழில் இது 'உட்கொடு குறுக்கிடுகை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எட்டாவது கரணம்.

சிவனின் ஆடல்

சதுஸ்ரகாலில் நின்று, முன் நோக்கி உத்வேஷ்டித வர்த்தனையால் சென்று, ஊர்த்தவ மண்டலி வர்த்தனையால் ஸ்வஸ்திகம் அமைய ஆடுவது மண்டலஸ்வஸ்திகம் .

உசாத்துணை


✅Finalised Page