first review completed

108 சிவ தாண்டவ விளக்கம்-நிஸ்தம்பிதம்

From Tamil Wiki
Revision as of 04:27, 7 October 2023 by Tamizhkalai (talk | contribs)
நிஸ்தம்பிதம் (நிலைப்பின்மை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - நிஸ்தம்பிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று நிஸ்தம்பிதம். தமிழில் இது 'நிலைப்பின்மை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது காலை வளைத்து, குதத்தின் சமீபமாக வைத்து உயர்த்தி, கடகாமுக ஹஸ்தமாக ஒரு கையை அமைத்து வலது கையை லலாட திலகமாகச் செய்து ஆடுவது நிஸ்தம்பிதம்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.