under review

108 சிவ தாண்டவ விளக்கம்-ரேச்சிதநிகுட்டிதம்

From Tamil Wiki
Revision as of 02:29, 27 October 2023 by Jayashree (talk | contribs)
ரேச்சிதநிகுட்டிதம் (விட்டுத் தட்டல்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - ரேச்சிதநிகுட்டிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று ரேச்சிதநிகுட்டிதம். தமிழில் இது 'விட்டுத் தட்டல்' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தி ஒன்பதாவது கரணம்.

சிவனின் ஆடல்

வலது கையை வீசி, வலது காலை மடக்கி, வாமஹஸ்தத்தை டோள ஹஸ்தமாகக் கொண்டு ஆடுவது ரேச்சிதநிகுட்டிதம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page