துயிலெடை நிலை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "'''துயிலெடை நிலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்க...") |
(Adding category சிற்றிலக்கிய வகைகள் to bot entries) |
||
Line 10: | Line 10: | ||
* [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]] | * [[தமிழில் சிற்றிலக்கியங்கள்]] | ||
[[ | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{being created}} | {{being created}} |
Revision as of 22:10, 10 February 2022
துயிலெடை நிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1]. தொல்காப்பியக் காலத்தில் மன்னனைக் குறித்துப் பாடப்படும் இது ஒரு துறையாக இருந்தது. பின்னர் பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் வழக்கம் ஏற்பட்டதுடன், தனியான ஒரு சிற்றிலக்கியமாகவும் உருவானது. இக்காலத்தில் இச் சிற்றிலக்கியம் பள்ளியெழுச்சி என்றும் அழைக்கப்படுவது உண்டு.
குறிப்புகள்
- ↑ பன்னிரு பாட்டியல், பாடல் 324
உசாத்துணைகள்
- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.
இவற்றையும் பார்க்கவும்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.