under review

சிவசம்புப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
(Moved categories to bottom of article)
Line 59: Line 59:
* [https://www.valvettithurai.org/uduppiddy-sivasampu-pulavar-s-great-grandson-neelakandan-passes-away-3728.html சிவசம்புப் புலவரின் பேரன் காலமானார் செய்தி]
* [https://www.valvettithurai.org/uduppiddy-sivasampu-pulavar-s-great-grandson-neelakandan-passes-away-3728.html சிவசம்புப் புலவரின் பேரன் காலமானார் செய்தி]
* [https://noolaham.net/project/542/54110/54110.pdf உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் வரலாறும் ஆக்கங்களும் இணையநூலகம்] ந.நகுலசிகாமணி
* [https://noolaham.net/project/542/54110/54110.pdf உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் வரலாறும் ஆக்கங்களும் இணையநூலகம்] ந.நகுலசிகாமணி
[[Category:Tamil Content]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]

Revision as of 15:36, 29 December 2022

சிவசம்புப்புலவர் சரித்திரம்
Thiruchenthilyamagvanthathi

சிவசம்புப்புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) (அ. சிவசம்புப் புலவர்) ஈழத்தைச் சேர்ந்த தமிழறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவசம்புப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் அருளம்பல முதலியார், கதிராசியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். நல்லூர்ச் சரவணமுத்துப்புலவர், நல்லூர்ச்சம்பந்தப்புலவர் ஆகியோரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றார்.

உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் பேரன் கா.நீலகண்டன் 'புலவர்மணி' என்று புகழ்பெற்ற தமிழறிஞர்.

இலக்கிய வாழ்க்கை

சிவசம்புப்புலவர் இளமையில் கவிபாடும் திறன் பெற்றிருந்தார். ஈழநாட்டில் பிரபந்தம் பாடிய புலவர்களுள் மிகுதியான பிரபந்தங்களைப் பாடியவர் இவரே எனப்படுகிறது. இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதிமீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடினார். பாண்டித்துரைத்தேவர் மீது நான்மணிமாலை பாடினார். அறுபது பிரபந்தங்களை எழுதியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மறையசையந்தாதியுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, கந்தபுரான வள்ளியம்மை திருமணப்படலவுரை போன்ற உரை நூல்களையும் இவர் ஆக்கியுள்ளார்

சிவசம்பு புலவரின் பேரன் கா.நீலகண்டன் அவருடைய நூல்களை ’உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் வரலாறும் ஆக்கங்களும்’ ‘உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு’ ‘தேவபாகமும் மானுடபாகமும்’ ஆகிய நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.

தொன்மம்

உடுப்பிட்டி சிவ சம்பு புலவருக்கு நடுவே பார்வையிழப்பு உருவாகி பொலிகை கந்தவன ஆலயத்தில் வழிபட்டமையால் கண்பார்வை திரும்பக் கிடைத்தது எனப்படுகிறது.

மாணவர்கள்

  • ச. வயித்தியலிங்கபிள்ளை
  • புலோலியூர் ம. தில்லை நாதநாவலர்
  • புலோலியூர் வ. குமாரசுவாமிப்புலவர்
  • அ. வேல்மயில்வாகனஞ் செட்டியார்
  • புலோலியூர் ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்
  • வ. கணபதிப்பிள்ளை
  • பூ. முருகேசப்பண்டிதர்
  • க. நமச்சிவாயப்பிள்ளை
  • ஆறுமுக நொத்தாரிசு

பட்டம்

ஆறுமுக நாவலர் சிவசம்புப்புலவருக்கு ‘புலவர்’ பட்டம் வழங்கினர்.

இலக்கிய இடம்

ஈழநாட்டுச் சிற்றிலக்கியப் புலவர்களில் சிவசம்புப் புலவர் குறிப்பிடத்தக்கவர். மரபான தமிழ்க்கல்வியை நிலைநிறுத்திய ஆசிரியர்களில் ஒருவர்.

மறைவு

சிவசம்புப்புலவர் செப்டம்பர் 29, 1910-ல் காலமானார்.

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

நூல் பட்டியல்

  • மயில்வாகனவம்ச வைபவம்
  • பாஸ்கரசேதுபதி கல்லாடக் கலித்துறை
  • பாஸ்கரசேதுபதி நான்மணிமாலை
  • பாஸ்கரசேதுபதி இரட்டைமணி மாலை
  • பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை
  • கந்தவனநாதர் பதிகம்
  • வல்லிபுரநாதர் பதிகம்
  • செந்தில்யமகவந்தாதி (1888, வல்வை)
  • திருவேரக அந்தாதி
  • எட்டிக்குடிப் பிரபந்தம்
  • புலோலிநான்மணிமாலை (1889, வல்வை)
  • திருச்செந்திற்றிருவந்தாதி (1888, வல்வை)
  • மறைசை நான்மணிமாலை
  • கதிர்காம வெண்பா
  • கண்டிக்கதிரேசன் பதிகம்
  • திரிகோணமலை வில்லூன்றி நான்மணிமாலை
உரைகள்
  • மறைசையந்தாதியுரை (1893)
  • யாப்பருங்கலக்காரிகை
  • கந்தபுராணம்-வள்ளியம்மை திருமணப்படலம்

உசாத்துணை


✅Finalised Page