மதுரை கூடலூர் கிழார்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(changed template text) |
||
Line 27: | Line 27: | ||
{{ | {{First review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 14:16, 15 November 2022
மதுரைக் கூடலூர் கிழார் முதுமொழிக்காஞ்சி நூலை இயற்றியவர். கூடலூர் இவர் பிறந்த ஊராகவும், மதுரை பின்பு வாழ்ந்த ஊராகவும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். இவர் சங்கப்புலவர் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தவர் என கருதப்படுகிறது.
தொல்காப்பிய மரபியலில்,
ஊரும் பேரும் உடைத் தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.
என்ற சூத்திர உரையில் 'அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்கு உரியன' என வரும் குறிப்பு மேற்கூறிய கருத்தை வலியுறுத்தும், தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உடைமைப்பெயர்க்கு உதாரணமாக அம்பர் கிழான், பேரூர்கிழான்' என்பவை காட்டப்பட்டுள்ளன. இது கொண்டு கூடலூரைத் தம் உடைமையாகக் கொண்டவர் கூடலூர்கிழார் என்றும் ஊகிக்கலாம். அரிசில் கிழார், ஆவூர் கிழார், காரி கிழார், கோவூர் கிழார், என்று இவ்வாறு கிழார் என்னும் சிறப்புடன் புலவர் பலர்சங்க நூல்களிலும் காணப்படுகின்றனர்.
சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்கப் புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் புறநானூற்றில் தாம் எழுதிய பாடினோர் வரலாற்றில், 'முதுமொழிக் காஞ்சியை இயற்றிய மதுரைக் கூடலூர் கிழார் வேறு; இவர் வேறு' என்று குறித்துள்ளார்.
பாடல் நடை
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
காதலில் சிறந்தன்று கன்னஞ்சப் படுதல்
மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
வன்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை
இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
குலனுடை மையின் கற்புச் சிறந்தன்ற
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
செற்றரை செருதலில் தற்செய்கை சிறந்தன்று
முன்பெரு கலின்பின் சிருகாமை சிறந்தன்று
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.