under review

உலாமடல்: Difference between revisions

From Tamil Wiki
(Removed Category:Spc)
 
Line 37: Line 37:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]


[[Category:Spc]]
 
[[Category:சிற்றிலக்கியம்]]
[[Category:சிற்றிலக்கியம்]]

Latest revision as of 21:44, 8 January 2026

To read the article in English: Ulamadal. ‎


உலாமடல் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மடல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்ணை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவது மடலூர்தல்.

பெண்ணொருத்தியைக் கனவில் கண்டு கனவிலேயே அவளுடன் கூடிய ஒருவன், கனவு முடிந்த நிலையில் அவளை அடைவதற்கு மடலூர்வேன் எனக் கூறுவதாகப் பாடுவது உலாமடல்

கனவின் ஒருத்தியைக் கண்டு புணர்ந்தோன்
நனவின் அவள்பொருட் டாக நானே
ஊர்வேன் மடல்என்று உரைப்பது உலாமடல்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 857

கனவில் ஒருத்தியைக் கண்டு கலவி
இன்பம் நுகர்ந்தோன் விழித்த பின்அவள்
பொருட்டுமடல் ஊர்வேன் என்பது கலிவெண்
பாவான் முடிப்பது உலாமடல் ஆகும்
- முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 125

உலாமடல் என்பது உரைத்திடில் தலைவன்
கனவில் ஒர்பெண்ணைக் கண்டு புணர்ந்ததம்
மடவரல் பொருட்டு மடலுர்வன் என்பதைக்
கலிவெண் பாவால்.கரைப்பது விதியே"
பிரபந்த தீபம்

 உலா, மடல்  என்னும் இரு சிற்றிலக்கியங்களின் தன்மைகளையும் கொண்டது உலாமடல்.  பாடல் வகையில் உலாவாகவும் பொருள் வகையில் மடலாகவும் அமைகிறது. இது கலிப்பாவில் அமையும். ஏனைய பாட்டியல் நூல்கள் கலிவெண்பா என்று குறிப்பிடுகையில் முத்துவீரியம் இன்னிசைக் கலிப்பா எனக் குறிப்பிடுகிறது. உலாமடலில் நூற்பா, பாட்டுடைத் தலைவனின் புகழ்  அல்லது தசாங்கம், தலைவியைக் கேசாதிபாதமாக வர்ணித்தல் ஆகியவை இடம் பெறுகின்றன.   

உசாத்துணை

இதர இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:27 IST