under review

108 சிவ தாண்டவ விளக்கம்-கடிச்சின்னம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Removed Category:Spc)
 
Line 21: Line 21:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:35, 8 January 2026

கடிச்சின்னம் (சுழலரை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - கடிச்சின்னம்

சிவபெருமான், ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று கடிச்சின்னம். தமிழில் இது, 'சுழலரை' என அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினொன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

வண்டுபோன்ற சாரியால், இருபக்கமும் சுழன்று, மண்டல ஸ்தானத்தில் நின்று, தோள்பட்டையின் உச்சியில் பல்லவ முத்திரைக் கையை வைப்பது வண்டுசாரி எனப்படும். பல்லவ ஹஸ்தம், பதாக முத்திரையோடு கூடிய இருகைகளையும், மணிக்கட்டிலிருந்து தொங்கவிட்டு, விரல்நுனியை அசைப்பது, 'பிரமரிசாரி' எனப்படும். இவை வண்டுபோல் சுழன்று சுற்றுதலைக் குறிக்கும். மண்டல ஸ்தானம் = பாதங்களை ஒன்றுக்கொன்று நான்கு சாண் தூரத்தில் வைத்துக் கொள்வது. இவ்வகை ஆடலே 'கடிச்சின்னம்' எனப்படும்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:13:03 IST