சே. கல்பனா: Difference between revisions
(Corrected typo errors;) |
|||
| Line 28: | Line 28: | ||
* [https://kavithaipata.blogspot.com/ கவிதைபாட வலைத்தளம்] | * [https://kavithaipata.blogspot.com/ கவிதைபாட வலைத்தளம்] | ||
* [https://www.vallamai.com/?p=88608 திருக்குறள் பரிதியார் உரை: முனைவர் சே.கல்பனா] | * [https://www.vallamai.com/?p=88608 திருக்குறள் பரிதியார் உரை: முனைவர் சே.கல்பனா] | ||
* [http://ulagatamil.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0/ சொல்லதிகாரம் | * [http://ulagatamil.in/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0/ சொல்லதிகாரம் - சேனாவரையர் உரையும் வேற்றுமையியலும்: சே. கல்பனா] | ||
* [https://www.hindutamil.in/author/808-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D கல்பனா சேக்கிழார் கட்டுரைகள்: இந்துதமிழ்திசை] | * [https://www.hindutamil.in/author/808-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D கல்பனா சேக்கிழார் கட்டுரைகள்: இந்துதமிழ்திசை] | ||
* [https://kallarkulavaralaru.blogspot.com/2019/10/blog-post_5.html கள்ளர்குல வரலாறு இணையப்பக்கம்] | * [https://kallarkulavaralaru.blogspot.com/2019/10/blog-post_5.html கள்ளர்குல வரலாறு இணையப்பக்கம்] | ||
Latest revision as of 15:50, 22 November 2025
- கல்பனா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கல்பனா (பெயர் பட்டியல்)
சே. கல்பனா (கல்பனா சேக்கிழார்) (பிறப்பு: மே 11, 1973) தமிழில் எழுதிவரும் கட்டுரையாளர், எழுத்தாளர், பேராசிரியர்.
பிறப்பு, கல்வி
சே. கல்பனா மே 11, 1973-ல் தஞ்சாவூரில் பிறந்தார். தந்தை செல்வம் ஈழம்கொண்டார் , தாய் திலகவதி. தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
தனிவாழ்க்கை
கல்பனா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இவர் கணவர் மருத்துவர் சேக்கிழார். சிதம்பரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சே. கல்பனா நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். இணைய இதழ்கள், நாளிதழ்களில் தமிழ் இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் எழுதிவருகிறார். 'சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா?', 'கலித்தொகை - பதிப்புகள்', 'திருநாவுக்கரசர்', 'புறநாநூற்றில் கல்விச் சிந்தனை', 'சொற்பொழிஞர் அண்ணா' போன்றவை இவர் எழுதிய சில கட்டுரைகள். கா.அப்பாத்துரை எழுதிய மொழியாக்க நூல்களை அப்பாத்துரையம் என்னும் தலைப்பில் பல தொகுதிகளாகத் தொகுத்துள்ளார். எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுமுறை பற்றியும் எழுதியுள்ளார். சேக்கிழார் கல்பனா- எஸ்.வையாபுரிப்பிள்ளையின் ஆய்வுமுறைமை)
விருதுகள்
இளம் ஆய்வாளர் விருது 2019
இலக்கிய இடம்
சே.கல்பனா கல்வித்துறை சார்ந்து மரபிலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகிறார்.
நூல் பட்டியல்
- திருக்குறள் - பரிதியாரின் உரைத்திறன்
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல்
- கணினியும் கன்னித்தமிழும்
- ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு
- அப்பாத்துரையம் (தொகுப்பாசிரியர்)
உசாத்துணை
இணைப்புகள்
- கல்பனா சேக்கிழார்: வலைத்தளம்
- கவிதைபாட வலைத்தளம்
- திருக்குறள் பரிதியார் உரை: முனைவர் சே.கல்பனா
- சொல்லதிகாரம் - சேனாவரையர் உரையும் வேற்றுமையியலும்: சே. கல்பனா
- கல்பனா சேக்கிழார் கட்டுரைகள்: இந்துதமிழ்திசை
- கள்ளர்குல வரலாறு இணையப்பக்கம்
- அப்பாத்துரையம் தொகைநூல் இணையநூலகம்.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
21-May-2023, 08:32:24 IST