being created

பொருள் இலக்கணம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 47: Line 47:
{| class="wikitable"
{| class="wikitable"
|+
|+
!'''வைகறை'''
|
!'''விடியற்காலம்'''
|விடியற்காலம்
|-
|காலை
|காலை நேரம்
|-
|நண்பகல்
|உச்சி வெயில் நேரம்
|-
|ஏற்பாடு
|சூரியன் மறையும் நேரம்
|-
|மாலை
|முன்னிரவு நேரம்
|-
|யாமம்
|நள்ளிரவு நேரம்
|}
 
சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.
 
===== பெரும்பொழுது =====
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
{| class="wikitable"
|+
|சித்திரை, வைகாசி
|இளவேனிற் காலம்
|-
|-
|
|ஆனி, ஆடி
|
|முதிவேனிற் காலம்
|-
|ஆவணி, புரட்டாசி
|கார் காலம்
|-
|ஐப்பசி, கார்த்திகை
|குளிர் காலம்
|-
|மார்கழி, தை
|முன்பனிக் காலம்
|-
|மாசி, பங்குனி
|பின்பனிக் காலம்
|}
சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.
{| class="wikitable"
|+
!
!பெரும்பொழுது
!சிறுபொழுது
|-
|குறிஞ்சி
|குளிர்காலம், முன்பனிக்காலம்
|யாமம்
|-
|முல்லை
 
|கார்காலம்
|மாலை
|-
|மருதம்
|ஆறு காலமும்
|வைகறை
|-
|-
|
|நெய்தல்
|
|ஆறு காலமும்
|எற்பாடு
|-
|-
|
|பாலை
|
|முதுவேனில், பின்பனி
|நண்பகல்
|}
|}



Revision as of 04:56, 6 September 2022

வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழிக்கே உரிய தனிச்சிறப்பாகும்,

பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

அகப்பொருள்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் இலக்கணம் அமைந்துள்ளது. இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும் கூறுவர். தலைவியின் தோழியும் அகப்பொருள் பாடல்களில் முக்கிய இடம் வகிக்கும் ஒரு பாத்திரம் ஆவாள்.  காதல் பற்றிப் பாடும்போது தலைவன் தலைவி என்று பொதுவாகப் பாடுவார்களே தவிர ஒருவருடைய இயற்பெயரைச் சுட்டிப் பாடுவதில்லை. காதல் உணர்ச்சி எல்லோருக்கும் பொது என்பதால் தனி ஒருவருடைய பெயரைச் சுட்டிப்பாடுவதில்லை. அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மை கொண்டிருக்கும். எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும். ஒரே பாடலில் இருவர் மூவர் உரையாடுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும். திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும். துறை என்பது பாடப்பெற்ற சூழலைக் குறிக்கும். அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும். அகப்பொருள் திணைகள் ஐந்து. அவை,

.இந்த ஐந்து திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று வகைப்படும். அவை,

  • முதற்பொருள்
  • உரிப்பொருள்
  • கருப்பொருள்
முதற்பொருள்

நிலம், பொழுது ஆகிய இரண்டும் முதற்பொருள் எனப்படும். உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவதற்கும், இயங்குவதற்கும் ஆதாரமாக உள்ளதால் இவற்றை முதற்பொருள் என்பர்.

நிலம்

ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு:

குறிஞ்சி மலையும் மலையைச் சார்ந்த இடமும்
முல்லை காடும் காடைச் சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயலைச் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும், கடலைச் சார்ந்த இடமும்
பாலை பாலை நிலமும் அதைச் சார்ந்த இடமும்

தமிழ்நாட்டில் உள்ள நிலப்பகுதி இவ்வாறு ஐந்து திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொழுது

பொழுது என்பது காலம் என்று பொருள்படும். பொழுது சிறு பொழுது, பெரும்பொழுது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிறு பொழுது

சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.

விடியற்காலம்
காலை காலை நேரம்
நண்பகல் உச்சி வெயில் நேரம்
ஏற்பாடு சூரியன் மறையும் நேரம்
மாலை முன்னிரவு நேரம்
யாமம் நள்ளிரவு நேரம்

சிறுபொழுது ஆறும் ஒரு நாளின் ஆறு கூறுகளாக இருப்பதை அறியலாம்.

பெரும்பொழுது

பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் காலப்பிரிவு ஆகும். ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களையும் ஆறு பிரிவுகளாகப் பிரிப்பர். இது நீண்ட காலப் பிரிவாக இருப்பதால் பெரும்பொழுது எனப்படுகிறது. ஆண்டில் உள்ள பன்னிரண்டு மாதங்களும் பின்வருமாறு ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி இளவேனிற் காலம்
ஆனி, ஆடி முதிவேனிற் காலம்
ஆவணி, புரட்டாசி கார் காலம்
ஐப்பசி, கார்த்திகை குளிர் காலம்
மார்கழி, தை முன்பனிக் காலம்
மாசி, பங்குனி பின்பனிக் காலம்

சிறுபொழுது, பெரும்பொழுது ஆகியவற்றை இவை இவை இந்தத் திணைகளுக்கு உரியவை என்று பிரித்து வைத்துள்ளனர்.

பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு காலமும் வைகறை
நெய்தல் ஆறு காலமும் எற்பாடு
பாலை முதுவேனில், பின்பனி நண்பகல்




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.