under review

இந்து மதாபிமான சங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(spelling mistakes corrected. Final Check.)
Line 3: Line 3:
இதழாளர், சமூக சீர்த்திருத்தவாதி [[சொ. முருகப்பா]], எழுத்தாளர், சொற்பொழிவாளர் [[ராய. சொக்கலிங்கன்|ராய.சொக்கலிங்கன்]], வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்கள் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடி திருவாசக மடத்தில் தோற்றுவித்த சங்கம், இந்து மதாபிமான சங்கம் (ஹிந்து மதாபிமான சங்கம்). ராய.சொக்கலிங்கன் இதன் தலைவராக இருந்தார்
இதழாளர், சமூக சீர்த்திருத்தவாதி [[சொ. முருகப்பா]], எழுத்தாளர், சொற்பொழிவாளர் [[ராய. சொக்கலிங்கன்|ராய.சொக்கலிங்கன்]], வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்கள் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடி திருவாசக மடத்தில் தோற்றுவித்த சங்கம், இந்து மதாபிமான சங்கம் (ஹிந்து மதாபிமான சங்கம்). ராய.சொக்கலிங்கன் இதன் தலைவராக இருந்தார்
== சங்கத்தின் நோக்கம் ==
== சங்கத்தின் நோக்கம் ==
ஹிந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. இந்து மதாபிமான சங்கம் 1952 முதல் காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
ஹிந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. 1952 முதல் காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
[[File:Chettinadu bharathi .jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி]]
[[File:Chettinadu bharathi .jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-1]]
[[File:Bharathi at Karaikudi.jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி]]
[[File:Bharathi at Karaikudi.jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-2]]
== செயல்பாடுகள் ==
== செயல்பாடுகள் ==
தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் விலை கொடுத்து வாங்கி 1918-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் விலை கொடுத்து வாங்கி 1918-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.


[[உ.வே.சாமிநாதையர்|உ.வே.சா]]., [[வ.உ. சிதம்பரனார்|வ.உ. சிதம்பரம் பிள்ளை,]] சுப்பிரமணிய சிவா, [[வ.வே. சுப்ரமணிய ஐயர்|வ.வே.சு.ஐயர்]], ராஜாஜி, [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]]., [[ஞானியார் அடிகள்|ஞானியார் சுவாமிகள்]], விபுலானந்தர், [[டி.கே.சிதம்பரநாத முதலியார்|டி.கே.சி]]., [[ந.மு. வேங்கடசாமி நாட்டார்|ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[மு. கதிரேசன் செட்டியார்|பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை|ரா.பி.சேதுப்பிள்ளை]], [[உமாமகேஸ்வரனார்|உமாமகேசுவரம் பிள்ளை,]] என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றியுள்ளனர்.
[[உ.வே.சாமிநாதையர்|உ.வே.சா]]., [[வ.உ. சிதம்பரனார்|வ.உ. சிதம்பரம் பிள்ளை,]] சுப்பிரமணிய சிவா, [[வ.வே. சுப்ரமணிய ஐயர்|வ.வே.சு.ஐயர்]], ராஜாஜி, [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]]., [[ஞானியார் அடிகள்|ஞானியார் சுவாமிகள்]], விபுலானந்தர், [[டி.கே.சிதம்பரநாத முதலியார்|டி.கே.சி]]., [[ந.மு. வேங்கடசாமி நாட்டார்|ந.மு.வேங்கடசாமி நாட்டார்]], [[மு. கதிரேசன் செட்டியார்|பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார்]], [[ரா.பி. சேதுப்பிள்ளை|ரா.பி.சேதுப்பிள்ளை]], [[உமாமகேஸ்வரனார்|உமாமகேசுவரம் பிள்ளை,]] என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றியுள்ளனர்.
Line 15: Line 15:
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாகக் கிடைத்துள்ள படங்களுள் இரண்டு படங்கள், இங்கு எடுக்கப்ப்பட்டவை.
பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாகக் கிடைத்துள்ள படங்களுள் இரண்டு படங்கள், இங்கு எடுக்கப்ப்பட்டவை.


முதல்வராக இருந்த சி.என். அண்ணாதுரை இந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.
முதல்வராக இருந்த [[அண்ணாத்துரை|சி.என். அண்ணாதுரை]] இந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.
[[File:Hindu mathabimana song by barathi Photo PL. Kailash.jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தாரை வாழ்த்தி பாரதி பாடிய பாடல்: படம் நன்றி: பழ. கைலாஷ்]]
[[File:Hindu mathabimana song by barathi Photo PL. Kailash.jpg|thumb|ஹிந்து மதாபிமான சங்கத்தாரை வாழ்த்தி பாரதி பாடிய பாடல்: படம் நன்றி: பழ. கைலாஷ்]]
== பாரதி, இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை ==
== பாரதி, இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை ==
Line 35: Line 35:


''பரம்பொருளை அகத்திற் சேர்த்து,''
''பரம்பொருளை அகத்திற் சேர்த்து,''


''செய்கைஎலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்''
''செய்கைஎலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்''
Line 89: Line 87:


''அழிகின்றார் ஓய்வி லாமே.''
''அழிகின்றார் ஓய்வி லாமே.''


''இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகம்''
''இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகம்''
Line 107: Line 103:


''இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்,''
''இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்,''


''உண்மையே தாரகம்என்று உணர்ந்திட்டார்,''
''உண்மையே தாரகம்என்று உணர்ந்திட்டார்,''
Line 125: Line 119:


''சங்கமொன்று சேர்த்திட் டாரே.''
''சங்கமொன்று சேர்த்திட் டாரே.''


''பலநூல்கள் பதிப்பித்தும், பல பெரியோர்''
''பலநூல்கள் பதிப்பித்தும், பல பெரியோர்''
Line 144: Line 136:
''வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.''
''வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.''
== சங்கம் இன்று ==
== சங்கம் இன்று ==
நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட, இச்சங்கம், நூறாண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டு வருகிறது.  
நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட, இச்சங்கம், நூறாண்டுகளைக் கடந்து இன்றும் காரைக்குடியில் செயல்பட்டு வருகிறது.  
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=163 காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின்மீது வாழ்த்துப் பாக்கள்]
* [https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=145&pno=163 காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின்மீது வாழ்த்துப் பாக்கள்]
* [https://kailashpalaniappan.blogspot.com/2019/11/blog-post_12.html காரைக்குடியில் பாரதி]
* [https://kailashpalaniappan.blogspot.com/2019/11/blog-post_12.html காரைக்குடியில் பாரதி]
* [http://old.thinnai.com/?p=21101175 ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணாதுரை: மலர் மன்னன் கட்டுரை]
* [http://old.thinnai.com/?p=21101175 ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணாதுரை: மலர் மன்னன் கட்டுரை]
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}

Revision as of 08:20, 1 September 2022

ஹிந்து மதாபிமான சங்கம்
ஹிந்து மதாபிமான சங்கம்: படம் நன்றி: பழ. கைலாஷ்

இதழாளர், சமூக சீர்த்திருத்தவாதி சொ. முருகப்பா, எழுத்தாளர், சொற்பொழிவாளர் ராய.சொக்கலிங்கன், வை.சு.சண்முகம் செட்டியார் மற்றும் பல நண்பர்கள் இணைந்து, செப்டம்பர் 10, 1917-ல், காரைக்குடி திருவாசக மடத்தில் தோற்றுவித்த சங்கம், இந்து மதாபிமான சங்கம் (ஹிந்து மதாபிமான சங்கம்). ராய.சொக்கலிங்கன் இதன் தலைவராக இருந்தார்

சங்கத்தின் நோக்கம்

ஹிந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதுடன் நாட்டு விடுதலையையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இச்சங்கம் செயல்பட்டது. 1952 முதல் காரைக்குடி சிவன் கோவில் அருகில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.

ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-1
ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதி-2

செயல்பாடுகள்

தமிழ்ப்பெரும்புலவர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் மறைந்தபோது அவர் திரட்டி வைத்திருந்த நூல்களை இச்சங்கம் விலை கொடுத்து வாங்கி 1918-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் நாள் 'விவேகானந்தா நூல் நிலையம்' என்ற பெயரில் ஒரு நூல் நிலையத்தை அமைத்தது. அந்நூலகம் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

உ.வே.சா., வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர், ராஜாஜி, திரு.வி.க., ஞானியார் சுவாமிகள், விபுலானந்தர், டி.கே.சி., ந.மு.வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், ரா.பி.சேதுப்பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, என பல தமிழறிஞர்கள், சான்றோர்கள் இந்துமதாபிமான சங்கத்துக்கு வருகை தந்து சிறப்புரையாற்றியுள்ளனர்.

கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார், கடையத்திலுள்ள பாரதியாருடன் கடித தொடர்பு கொண்டு கானாடுகாத்தானுக்கு அழைக்க, பாரதியும் அதனை ஏற்றுக் கொண்டார். கானாடுகாத்தானுக்கு வரும் வழியில், 1919-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள், மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்துக்கு வருகை தந்தார். சங்கத்தின் மீது ஏழு கவிதைகளை இயற்றி அதன் பணிகளைப் போற்றினார்.

பாரதி தன் வாழ்நாளில் எடுத்துக்கொண்டதாகக் கிடைத்துள்ள படங்களுள் இரண்டு படங்கள், இங்கு எடுக்கப்ப்பட்டவை.

முதல்வராக இருந்த சி.என். அண்ணாதுரை இந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி உள்ளார்.

ஹிந்து மதாபிமான சங்கத்தாரை வாழ்த்தி பாரதி பாடிய பாடல்: படம் நன்றி: பழ. கைலாஷ்

பாரதி, இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை

1919-ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள், மகாகவி பாரதியார் இந்து மதாபிமான சங்கத்தை வாழ்த்திப் பாடிய கவிதை:

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்

அமரரைப் போல் மடிவில் லாமல்

திண்ணமுற வாழ்ந்திடலாம் அதற்குரிய

உபாயமிங்கு செப்பக் கேளீர்!

நண்ணிஎலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்

செய்கைஎலாம் நடத்தும் வீறாய்த்

திண்ணியநல் அறிவொளியாய்த் திகழும் ஒரு

பரம்பொருளை அகத்திற் சேர்த்து,

செய்கைஎலாம் அதன்செய்கை, நினைவெல்லாம்

அதன்நினைவு, தெய்வ மேநாம்

உய்கைஉற நாமாகி நமக்குள்ளே

ஒளிர்வதென உறுதி கொண்டு

பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,

வீண் விருப்பம், புழுக்கம், அச்சம்

ஐயம்எனும் பேயைஎலாம் ஞானம் எனும்

வாளாலே அறுத்துத் தள்ளி


எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்

வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்

தப்பாதே இவ்வுலகில் அமரநிலை

பெற்றிடுவார். சதுர்வே தங்கள்

மெய்ப்பான சாத்திரங்கள் எனும் இவற்றால்

இவ்வுண்மை விளங்கக் கூறும்

துப்பான மதத்தினையே ஹிந்துமதம்

எனப்புவியோர் சொல்லு வாரே.


அருமைஉறு பொருளில்எலாம் மிக அரிதாய்த்

தனைச்சாரும் அன்பர்க் கிங்கு

பெருமைஉறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்

ஹிந்துமதப் பெற்றி தன்னைக்

கருதி, அதன் சொற்படி இங்கு ஒழுகாத

மக்கள்எலாம் கவலை என்னும்

ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்து

அழிகின்றார் ஓய்வி லாமே.

இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகம்

தனை, உலகில் இசைக்க வல்ல

புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்

பாரறியப் புகட்டும் வண்ணம்

தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினில் கா

ரைக்குடியூர் தனிலே சால

உத்தமராம் தனவணிகர் குலத்துதித்த

இளைஞர்பலர், ஊக்கம் மிக்கார்,

உண்மையே தாரகம்என்று உணர்ந்திட்டார்,

அன்பொன்றே உறுதி என்பார்,

வண்மையே குலதர்மம் எனக்கொண்டார்,

தொண்டொன்றே வழியாக் கண்டார்

ஒண்மைஉயர் கடவுளிடத்து அன்புடையார்,

அவ்வன்பின் ஊற்றத் தாலே

திண்மைஉறும் ஹிந்துமத அபிமான

சங்கமொன்று சேர்த்திட் டாரே.

பலநூல்கள் பதிப்பித்தும், பல பெரியோர்

பிரசங்கம் பண்ணு வித்தும்

நலமுடைய கலாசாலை புத்தகசா

லைபலவும் நாட்டி யும்தம்

குலம்உயர நகர்உயர நாடுயர

உழைக்கின்றார்; கோடி மேன்மை

நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி

வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.

சங்கம் இன்று

நாடு,சமயம்,மொழி ஆகியவற்றின் மீதான பற்றினை இளைஞர்களிடம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட, இச்சங்கம், நூறாண்டுகளைக் கடந்து இன்றும் காரைக்குடியில் செயல்பட்டு வருகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.