சமஸ்: Difference between revisions
Line 22: | Line 22: | ||
இந்து தமிழ் திசை நாளிதழிருந்து விலகிய பின் ஆகஸ்ட் 27, 2021இல் [[அருஞ்சொல்]] என்ற இணைய பத்திரிக்கையைத் தொடங்கி அதன் ஆசிரியராக உள்ளார். அன்றாடம் தலையங்கம், கட்டுரைகள் என மூன்று பதிவுகளுக்கு மிகாமல் பதிவிட்டு வருகிறார். செப்டம்பர் 17, 2021இல் ‘அருஞ்சொல்’ என்ற யுடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் காணொளிகளையும் பதிவிட்டு வருகிறார். "இன்றைய ‘அருஞ்சொல்’ நிதானமான மொழியில் அமைந்த பலதரப்பட்ட கட்டுரைகளால் ஆன நல்ல இணைய இதழாக உள்ளது." என எழுத்தாளர் [[ஜெயமோகன்]] மதிப்பிடுகிறார் | இந்து தமிழ் திசை நாளிதழிருந்து விலகிய பின் ஆகஸ்ட் 27, 2021இல் [[அருஞ்சொல்]] என்ற இணைய பத்திரிக்கையைத் தொடங்கி அதன் ஆசிரியராக உள்ளார். அன்றாடம் தலையங்கம், கட்டுரைகள் என மூன்று பதிவுகளுக்கு மிகாமல் பதிவிட்டு வருகிறார். செப்டம்பர் 17, 2021இல் ‘அருஞ்சொல்’ என்ற யுடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் காணொளிகளையும் பதிவிட்டு வருகிறார். "இன்றைய ‘அருஞ்சொல்’ நிதானமான மொழியில் அமைந்த பலதரப்பட்ட கட்டுரைகளால் ஆன நல்ல இணைய இதழாக உள்ளது." என எழுத்தாளர் [[ஜெயமோகன்]] மதிப்பிடுகிறார் | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
* எழுத்தாளர் சுஜாதா விருது | |||
* எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது | |||
* பத்திரிகையாளர் சின்ன குத்தூசி விருது | |||
* 2021இல் மருத்துவர் ஜீவா பசுமை விருது சமஸுக்கு வழங்கப்பட்டது. | * 2021இல் மருத்துவர் ஜீவா பசுமை விருது சமஸுக்கு வழங்கப்பட்டது. | ||
* 2021இல் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. | * 2021இல் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. |
Revision as of 19:37, 31 August 2022
சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய பத்திரிக்கையின் ஆசிரியர்.
பிறப்பு, கல்வி
சமஸ் மன்னார்குடியில் மு. சந்திரசேகரன், மு.இரா. மலர்க்கொடி இணையருக்கு டிசம்பர் 4, 1979இல் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தை காலமானார். தாய்வழித் தாத்தா சு. ராஜகோபாலனின் ஆதரவில் தொடக்கக் கல்வியை மன்னார்குடி சேவியர் ஜீசஸ் பொதுப் பள்ளி, இலக்கணாம்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மன்னார்குடி பின்லே தொடக்கப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை பின்லே மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மன்னார்குடி இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார்.
தனி வாழ்க்கை
பள்ளி நாட்களில் ‘இந்தியன்’, கல்லூரி நாட்களில் ‘இந்தியன் இனி’ போன்ற இதழ்களில் பணியாற்றினார். ‘தினமலர்’, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘ புதிய தலைமுறை’, ‘தி இந்து தமிழ் திசை’ நாளிதழில் பணியாற்றினார். மனைவி ரா.ரேகா. இரு குழந்தைகள். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இலக்கிய வாழ்க்கை
சமஸ் கல்லூரி நாட்களில் 'நினைவுகள்’, ’கண்ணீர் காதலன்’, ’நிழல்’ என மூன்று கவிதை நூல்களை வெளியிட்டார். இந்தியத் தேர்தலை நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் எப்படிப் பார்க்கிறார்களென நாடெங்கும் பயணித்து 'இந்தியாவின் வண்ணங்கள்' நூலை எழுதினார். ஆதிகுடிகளான கடலோடிகள், விவசாயிகள், வனவாசிகள் நிலையைக் களத்தில் தங்கிப் பதிவு செய்யும் 'நீர், நிலம், வனம்' இரு தொடர்களும் முக்கியமான முயற்சிகள். 2016இல் தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் போது இவர் எழுதிய 'அரசியல் பழகு' தொடர், அரசியலுக்கும் பொதுமக்கள் சமுதாயத்துக்கும் இடையேயான பிணைப்பையும், பரஸ்பர சார்பையும் எடுத்துரைத்தது. ’லண்டன்’ என்ற பயணக்குறிப்பு நூலை எழுதியுள்ளார். 'தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ கருணாநிதியை அருகிலிருந்து பார்த்தவர்களின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு. 'மாபெரும் தமிழ்க்கனவு’ அண்ணா வாழ்க்கை வரலாறு, அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள், அரிய பேட்டிகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
இலக்கிய இடம்
‘சாப்பாட்டுப் புராணம்’ நூல் தமிழர் உணவைக் கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு ‘இந்தியா டுடே’ வார இதழ் “இந்தப் புத்தகம் பெரும் பொக்கிஷமாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டது.
இதழியல்
தினமணி நாளிதழின் ‘ஞாயிறு கொண்டாட்டம்’ இணைப்பிதழில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் உணவு தொடர்பான கட்டுரைகளை எழுதினார். 2009இல் ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற பெயரில் அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. ‘தினமணி’யின் தலையங்கப் பக்கக் கட்டுரையாளர்களில் ஒருவரானார். ‘ஆனந்த விகடன்’ வார இதழுக்கு மாறிய பின்னர் அதன் பத்தி எழுத்தாளரானார். ‘புதிய தலைமுறை’ நிறுவனம் தொடங்கவிருந்த ‘புது யுகம்’ தொலைக்காட்சியின் ஆரம்ப காலக் குழுவில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான பால.கைலாசத்தின் கீழ் பணியாற்றினார். ‘தி இந்து’ குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்கியபோது அதன் நிறுவன அணியில் பங்கேற்க அழைக்க, ‘தி இந்து தமிழ்திசை’ நாளிதழில் பணியாற்றினார். தற்போது அருஞ்சொல் இணைய இதழின் ஆசிரியராக உள்ளார்.
அருஞ்சொல்
இந்து தமிழ் திசை நாளிதழிருந்து விலகிய பின் ஆகஸ்ட் 27, 2021இல் அருஞ்சொல் என்ற இணைய பத்திரிக்கையைத் தொடங்கி அதன் ஆசிரியராக உள்ளார். அன்றாடம் தலையங்கம், கட்டுரைகள் என மூன்று பதிவுகளுக்கு மிகாமல் பதிவிட்டு வருகிறார். செப்டம்பர் 17, 2021இல் ‘அருஞ்சொல்’ என்ற யுடியூப் பக்கத்தைத் தொடங்கி அதில் காணொளிகளையும் பதிவிட்டு வருகிறார். "இன்றைய ‘அருஞ்சொல்’ நிதானமான மொழியில் அமைந்த பலதரப்பட்ட கட்டுரைகளால் ஆன நல்ல இணைய இதழாக உள்ளது." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்
விருதுகள்
- எழுத்தாளர் சுஜாதா விருது
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது
- பத்திரிகையாளர் சின்ன குத்தூசி விருது
- 2021இல் மருத்துவர் ஜீவா பசுமை விருது சமஸுக்கு வழங்கப்பட்டது.
- 2021இல் கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது.
நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- நினைவுகள்
- கண்ணீர் காதலன்
- நிழல்
கட்டுரை
- சாப்பாட்டுப் புராணம் (2015, துளி வெளியீடு)
- இந்தியாவின் வண்ணங்கள் 2011
- கடல் (நீர், நிலம், வனம்) (2015, இந்து தமிழ் திசை)
- ஒரு பள்ளி வாழ்க்கை (2022, அருஞ்சொல் வெளியீடு)
அரசியல்
- அரசியல் பழகு (2015, துளி வெளியீடு)
- ஊடகர் கலைஞர் (2011, மணற்கேணி பதிப்பகம்)
- யாருடைய எலிகள் நாம்? (2017, துளி வெளியீடு)
தொகுப்புகள்
- தெற்கிலிருந்து ஒரு சூரியன் (2017, இந்து தமிழ் திசை)
- மாபெரும் தமிழ்க்கனவு (2020, இந்து தமிழ் திசை)
பயணம்
- லண்டன் (2022, அருஞ்சொல் வெளியீடு)
உரைகள்
- சமஸ் உரை | சென்னைப் பேரழிவு : நாம் கற்றதும் கடந்ததும்
- கோவிட்-19க்கு பின் சமூக மாற்றம் | பத்திரிகையாளர் சமஸ்
- Samas speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | சமஸ் உரை | டி.தருமராஜ்
- மாற்றம் ஆவோம் - சமஸ் பேச்சு | Samas speech
- Gandhian Nationalism ll காந்தியின் தேசியம் ll Samas l சமஸ்
இணைப்புகள்
- சமஸ் வலைதளம்
- அருஞ்சொல் வலைதளம்
- அருஞ்சொல் (Arunchol): யுடியூப் சேனல்
- சமஸ் கட்டுரைஅக்ள்: தி இந்து தமிழ் திசை நாளிதழ்
- சமஸ்: A De-professionalized Intellectual: தமிழினி: முகம்மது ரியாஸ்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.