ஹென்றி மார்ட்டின்: Difference between revisions
(Corrected Category:கல்வியாளர்கள் to Category:கல்வியாளர்) |
(Corrected Category:இதழாளர்கள் to Category:இதழாளர்) |
||
| Line 24: | Line 24: | ||
[[Category:கல்வியாளர்]] | [[Category:கல்வியாளர்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:இதழாளர்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] | ||
Revision as of 18:10, 17 November 2024
- ஹென்ரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஹென்ரி (பெயர் பட்டியல்)
To read the article in English: Henry Martin.
ஹென்றி மார்ட்டின் (1811 - மார்ச் 31, 1861) யாழ்பாணத்தின் தொடக்ககால கல்வியாளர், இதழாளர், வட்டுக்கோட்டை குருமடத்துடன் தொடர்புடையவர். தமிழ், ஆங்கில மொழி அறிஞர்
பிறப்பு,கல்வி
ஹென்றி மார்ட்டின், 1811-ம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தெல்லிப்பழையில் அமைந்திருந்த அமெரிக்க மிசன் தருமப் பாடசாலையில் பெற்ற பின் தொடர்ந்து வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பிலும் கல்வி கற்றார்.
தனிவாழ்க்கை
ஹென்றி மார்ட்டின் வட்டுக்கோட்டை குருமடத்திலேயே ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். 1941-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிகையும், யாழ்ப்பாணத்தின் முதல் செய்திப் பத்திரிகையுமான உதயதாரகையின் முதல் ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர் அதன் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர்
1843-ல், வட்டுக்கோட்டைச் செமினரியில் இருந்து விலகி, அரசாங்கக் களஞ்சியப் பொறுப்பாளர் என்னும் பதவியில் அமர்ந்தார். அத்துடன், உயர் நீதிமன்ற வழக்குகள் நடைபெறும் காலங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். அச்சியந்திரம் ஒன்றை வாங்கும் முயற்சியில் 1861-ம் ஆண்டு சென்னைக்குச் சென்ற இவர் திரும்பிவந்து சில நாட்களிலேயே காலமானார்.
மறைவு
ஹென்றி மார்ட்டின் மார்ச் 31, 1861-ல் காலமானார்.
உசாத்துணை
- மார்ட்டின், ஜோன்.எச்; Notes on Jaffna, Chronological, Historical, Biographical; தெல்லிப்பழை, இலங்கை, 1923. (மறுபதிப்பு: ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003).
[[]]
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:58 IST