under review

வினாசித்தம்பி புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 14: Line 14:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|14-Sep-2023, 22:03:41 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Latest revision as of 12:05, 13 June 2024

வினாசித்தம்பி புலவர் (1887-1930) ஈழத்து தமிழறிஞர், ஆசிரியர், நாடகக் கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

வினாசித்தம்பி புலவர் இலங்கை மட்டக்களப்பு தில்லைமண்டூரில் 1887-ல் பிறந்தார். புலோலியூர் சந்திரசேகர பண்டிதர், யாழ்ப்பாணம் முருகேசு உபாத்தியாயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், புராண இதிகாசங்களைக் கற்றார். வினாசித்தம்பி புலவர் தன் இல்லத்தைத் திண்ணைப் பள்ளிக்கூடமாக்கிப் புராணங்களையும், நீதி நூல்களையும் கற்பித்தார். மட்டக்களப்பில் வழக்கிலிருந்த வடமோடிக்கூத்து, தென்மோடிக்கூத்து ஆகிய நாட்டுக்கூத்து வகைகளைப் பயின்றார்.

இலக்கிய வாழ்க்கை

வினாசித்தம்பி புலவர் முருகக் கடவுள் மீது பக்தி கொண்டு அவர் மீது பிரபந்தங்கள் பல பாடினார். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

மறைவு

வினாசித்தம்பி புலவர் 1930-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • மண்டூர் முருகன் காவடிப்பாட்டு
  • மண்டூர் வடிவேலவர் குறம்
  • கதிர் காமத்தந்தாதி
  • திருச்செந்தூர் முருகன் பதிகம்
  • தில்லை நடராசர் பதிகம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2023, 22:03:41 IST