under review

மு.மேத்தா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 9: Line 9:


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
சமூக விமர்சனத் தொனியில் அமைந்த ''"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"'' என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
மு.மேத்தா மதுரை தியாகராசர் கல்லூரியில் பயில்கையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். 1971ல் அவர் கோவை அரசுக் கலைக்கல்லூரிக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். [[புவியரசு]], [[சிற்பி]], பாலா, தமிழ்நாடன் [[முல்லை ஆதவன்]], [[ஞானி]], [[ஜனசுந்தரம்]], அக்னிபுத்திரன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது [[வானம்பாடி கவிதை இயக்கம்]] உருவானபோது அதில் பங்கெடுத்தார். [[வானம்பாடி]] இதழில் கவிதைகள் எழுதினார். மேத்தா மரபை நிராகரிக்காத புதுமை தேவை என கருதியவர்.  ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்தில் கூறினார்.  ‘இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’என்ற கேள்வியை; வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதை எழுதினார். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது. வானம்பாடி இயக்கத்தின் முத்திரை வரிகளில் ஒன்று அது. மு.மேத்தா எழுதிய ''"தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி"'' என்ற கவிதை புகழ்பெற்றது. தொடர்ந்து கண்ணீர்ப்பூக்கள், என்னும் தொகுதி வெளிவந்து அவர் அன்று தமிழில் எழுதிய புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக ஆனார்.  


''வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.1971ம் ஆண்டு கோவை அரசுக் கலைக் கல்லூரிக்கு மாற்றலாகச் சென்றேன். அங்கு அற்புதமான ஒரு கவிஞர்களுடைய வட்டம் அமைந்தது. புவியரசு, சிற்பி, பாலா, தமிழ்நாடன் முல்லை ஆதவன், அக்னிபுத்திரன் இப்படி தமிழ் நாட்டின் மிகச்சிறந்த கவிஞர்களெல்லாம் கோவையிலே இணைந்து, ‘வானம்பாடி’என்ற ஒரு இதழைத் தொடங்கினோம்.  
1975 ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். வானம்பாடிகளில் சிற்பி போன்றவர்கள் அவசரநிலை கெடுபிடிகளால் ஒதுங்கிக்கொண்டனர். ஆகவே வானம்பாடி இயக்கம் பிளவுபட்டு இதழ் நின்றது.


வானம்பாடியின் சூழல் அமைப்பு, சிற்பி-மீரா இப்படி பலகவிஞர்களின் கூட்டுறவு; அதே சமயம் ஞானி, ஜனசுந்தரம் போன்ற மார்க்சிய சித்தாந்தவாதிகளின் இணைப்பு, தத்துவ வாதிகளுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஏற்பட்ட மோதல்கள் இவையெல்லாம் சேர்ந்து புதுவிதமான பரிமாணத்திற்கு என்னைக் கொண்டுவந்தன என்று நான் நினைக்கிறேன்.
மு.மேத்தா அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர் ஆனார். கலைஞருக்கும் தமிழ் என்று பேர் என்ற பெயரில் 2010ல் ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். 1981ல் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையிலேயே பாடலாசிரியராகப் பணியாற்றினார்.


அப்பொழுதுதான் நான் புதுக்கவிதையை எழுதத் தொடங்குகிறேன். அப்போது கூட மரபுக் கவிதையைத் தாக்குகிற போக்கையும், மரபை முழுக்க முழுக்க தகர்க்கிற போக்கையும் நான் எதிர்த்தேன். ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்திலே நான் அறிவித்தேன். அப்போதுதான், ‘இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’என்ற கேள்வியை; வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதையை எழுதினேன். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது.
====== நாயகம் ஒரு காவியம் ======
மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது. நாயகம் ஒரு காவியம். கண்ணதாசனின் ஏசு காவியத்தை முன்னுதாரணமாகக்கொண்டு புதுக்கவிதையில் எழுத தொடங்கிய அந்நூல் பதுருப் போருடன் நின்றுவிட்டது. அதன் பிறகான நபி வரலாற்றை எழுதும் உடல்நிலை அவருக்கு அமையவில்லை என ஒரு பேட்டியில் சொல்கிறார். 2013 ல்  ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  


=== நாயகம் ஒரு காவியம் ===
== திரைப்படத்துறை ==
கவிஞர் வாலியின் <nowiki>'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்''</nowiki> என்றார் வாலி.
மு.மேத்தா பாடல் எழுதிய முதல் படம் சங்கர் கணேஷ் இசையமைப்பில் 1981ல் வெளிவந்த அனிச்ச மலர். அதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.


ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும்   அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
== விருதுகள் ==
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
* "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
* ''ஆகாயத்துக்கு அடுத்த வீடு'' (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது


நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
== இலக்கிய இடம் ==
 
மு.மேத்தாவின் கவிதைகள் எழுபதுகளில் ஓங்கி ஒலித்த மூன்று பொதுவெளிக் கோஷங்களின் மொழிப்பதிவுகள். எழுபதுகளில் இந்தியப் பொருளியல் சோர்வுநிலையில் இருந்தது. வேலையில்லாத இளைஞர்கள் பெருகியிருந்தனர். அரசியலில் மாற்றத்திற்கு வழியே இல்லை என்னும் இறுக்கநிலை நிலவியது. அதற்கு எதிராக இந்தியாவெங்கும் இளைஞர் நடுவே சீற்றம் உருவானது. ஜெயப்பிரகாஷ் நாராரயணன் உருவாக்கிய மாணவர் கிளர்ச்சி, வங்கத்தில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய நக்ஸலைட் கிளர்ச்சி (இடதுசாரி தீவிரவாத குழுவினர்) ஆகியவை அந்த சீற்றத்தின் வெளிப்பாடுகள். மு.மேத்தா கவிதைகளில் அந்தச் சீற்றம் புனைந்துரைக்கப்பட்ட வரிகளாக வெளிப்படுகிறது. அக்காலகட்டத்தில்தான் படித்த இளைஞர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை தாங்களே தேர்வுசெய்யும் உணர்வுநிலையை பொதுவாக அடைந்தனர். காதல் என்பது அன்றைய இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேசுபொருள். அவ்வுணர்வுகளை மு.மேத்தா வெளிப்படுத்துகிறார். அத்துடன் அன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், வரதட்சிணை போன்ற சமூகமுறைகளுக்கு எதிராக சீற்றம் எழுந்தது. அவையும் அவர் கவிதைகளில் உள்ளன. அவை அன்றைய உணர்வுகளை வெளிப்படுத்தியமையால் இளைஞர்களால் விரும்பப்பட்டன. ஆனால் மு.மேத்தாவின் கவிதைகள் வெளிப்படையானவை, ஆர்ப்பாட்டமான சொல்லாட்சி கொண்டவை. நவீனக்கவிதைக்குரிய நுண்ணிய வெளிப்பாடோ, மறைபிரதித் தன்மையோ, சொல்லடக்கமோ இல்லாதவை என இலக்கியவிமர்சகர்கள் நிராகரித்தனர்.
🎀 இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.


== நூல்கள் ==
== நூல்கள் ==


== கவிதை ==
====== கவிதை ======


# கண்ணீர்பூக்கள் (1974)
# கண்ணீர்பூக்கள் (1974)
Line 53: Line 56:
# நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)
# நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)


== கட்டுரை ==
====== கட்டுரை ======


# திறந்த புத்தகம்
# திறந்த புத்தகம்


== நாவல்கள் ==
====== நாவல்கள் ======


# சோழ நிலா
# சோழ நிலா
# மகுடநிலா
# மகுடநிலா


=== சிறுகதை  ===
====== சிறுகதை  ======


* கிழித்த கோடு
* கிழித்த கோடு
* மு.மேத்தா சிறுகதைகள்
* மு.மேத்தா சிறுகதைகள்
* பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
* பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)
== விருதுகள் ==
* "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
* "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
* ''ஆகாயத்துக்கு அடுத்த வீடு'' (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது


== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 10:32, 8 March 2022

மு.மேத்தா

மு.மேத்தா (5 செப்டெம்பர் 1945 ) (முகமது மேத்தா, பிறப்பு) தமிழ் கவிஞர். வானம்பாடி இதழுடன் இணைந்து இயங்கியவர். வானம்பாடி கவிதை இயக்கம் உருவாக்கிய கவிஞர். திரைப்பாடலாசிரியர். நாவலாசிரியர்.

பிறப்பு கல்வி

மு.மேத்தாவின் இயற்பெயர் முகமது மேத்தார். 5 செப்டெம்பர் 1945ல் பெரியகுளத்தில் பிறந்தார்.பெரியகுளம் வி.நி.கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியும் மதுரை தியாகராசர் கலைக்கல்லுரியில் பட்டப்படிப்பும் முடித்தார்

தனிவாழ்க்கை

மு.மேத்தாவின் சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா வை மணந்தார். அவர்களுக்கு ஐந்து மகள்கள். மு.மேத்தா சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

மு.மேத்தா மதுரை தியாகராசர் கல்லூரியில் பயில்கையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். 1971ல் அவர் கோவை அரசுக் கலைக்கல்லூரிக்கு பணிமாற்றம் பெற்று வந்தார். புவியரசு, சிற்பி, பாலா, தமிழ்நாடன் முல்லை ஆதவன், ஞானி, ஜனசுந்தரம், அக்னிபுத்திரன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது வானம்பாடி கவிதை இயக்கம் உருவானபோது அதில் பங்கெடுத்தார். வானம்பாடி இதழில் கவிதைகள் எழுதினார். மேத்தா மரபை நிராகரிக்காத புதுமை தேவை என கருதியவர். ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்தில் கூறினார். ‘இந்தப் பூமி உருண்டையை புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’என்ற கேள்வியை; வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதை எழுதினார். அது வானம்பாடி முதல் இதழிலே வெளிவந்தது. வானம்பாடி இயக்கத்தின் முத்திரை வரிகளில் ஒன்று அது. மு.மேத்தா எழுதிய "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை புகழ்பெற்றது. தொடர்ந்து கண்ணீர்ப்பூக்கள், என்னும் தொகுதி வெளிவந்து அவர் அன்று தமிழில் எழுதிய புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவராக ஆனார்.

1975 ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். வானம்பாடிகளில் சிற்பி போன்றவர்கள் அவசரநிலை கெடுபிடிகளால் ஒதுங்கிக்கொண்டனர். ஆகவே வானம்பாடி இயக்கம் பிளவுபட்டு இதழ் நின்றது.

மு.மேத்தா அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர் ஆனார். கலைஞருக்கும் தமிழ் என்று பேர் என்ற பெயரில் 2010ல் ஒரு கவிதை தொகுதி வெளியிட்டார். 1981ல் திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையிலேயே பாடலாசிரியராகப் பணியாற்றினார்.

நாயகம் ஒரு காவியம்

மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது. நாயகம் ஒரு காவியம். கண்ணதாசனின் ஏசு காவியத்தை முன்னுதாரணமாகக்கொண்டு புதுக்கவிதையில் எழுத தொடங்கிய அந்நூல் பதுருப் போருடன் நின்றுவிட்டது. அதன் பிறகான நபி வரலாற்றை எழுதும் உடல்நிலை அவருக்கு அமையவில்லை என ஒரு பேட்டியில் சொல்கிறார். 2013 ல் ரஹ்மத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைப்படத்துறை

மு.மேத்தா பாடல் எழுதிய முதல் படம் சங்கர் கணேஷ் இசையமைப்பில் 1981ல் வெளிவந்த அனிச்ச மலர். அதன் பின் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 300க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கு திரை உரையாடல் எழுதியுள்ளார்.

விருதுகள்

  • "ஊர்வலம்" (கவிதை நூல்) தமிழக அரசின் முதற்பரிசு
  • "சோழ நிலா" (நாவல்) ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை நூல்) சாகித்திய அகாதமி விருது

இலக்கிய இடம்

மு.மேத்தாவின் கவிதைகள் எழுபதுகளில் ஓங்கி ஒலித்த மூன்று பொதுவெளிக் கோஷங்களின் மொழிப்பதிவுகள். எழுபதுகளில் இந்தியப் பொருளியல் சோர்வுநிலையில் இருந்தது. வேலையில்லாத இளைஞர்கள் பெருகியிருந்தனர். அரசியலில் மாற்றத்திற்கு வழியே இல்லை என்னும் இறுக்கநிலை நிலவியது. அதற்கு எதிராக இந்தியாவெங்கும் இளைஞர் நடுவே சீற்றம் உருவானது. ஜெயப்பிரகாஷ் நாராரயணன் உருவாக்கிய மாணவர் கிளர்ச்சி, வங்கத்தில் உருவாகி இந்தியாவெங்கும் பரவிய நக்ஸலைட் கிளர்ச்சி (இடதுசாரி தீவிரவாத குழுவினர்) ஆகியவை அந்த சீற்றத்தின் வெளிப்பாடுகள். மு.மேத்தா கவிதைகளில் அந்தச் சீற்றம் புனைந்துரைக்கப்பட்ட வரிகளாக வெளிப்படுகிறது. அக்காலகட்டத்தில்தான் படித்த இளைஞர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையை தாங்களே தேர்வுசெய்யும் உணர்வுநிலையை பொதுவாக அடைந்தனர். காதல் என்பது அன்றைய இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேசுபொருள். அவ்வுணர்வுகளை மு.மேத்தா வெளிப்படுத்துகிறார். அத்துடன் அன்று பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், வரதட்சிணை போன்ற சமூகமுறைகளுக்கு எதிராக சீற்றம் எழுந்தது. அவையும் அவர் கவிதைகளில் உள்ளன. அவை அன்றைய உணர்வுகளை வெளிப்படுத்தியமையால் இளைஞர்களால் விரும்பப்பட்டன. ஆனால் மு.மேத்தாவின் கவிதைகள் வெளிப்படையானவை, ஆர்ப்பாட்டமான சொல்லாட்சி கொண்டவை. நவீனக்கவிதைக்குரிய நுண்ணிய வெளிப்பாடோ, மறைபிரதித் தன்மையோ, சொல்லடக்கமோ இல்லாதவை என இலக்கியவிமர்சகர்கள் நிராகரித்தனர்.

நூல்கள்

கவிதை
  1. கண்ணீர்பூக்கள் (1974)
  2. ஊர்வலம் (1977)
  3. மனச்சிறகு (1978)
  4. அவர்கள்வருகிறார்கள் (1980)
  5. முகத்துக்கு முகம் (1981)
  6. நடந்தநாடகங்கள் (1982)
  7. காத்திருந்த காற்று (1982)
  8. ஒரு வானம் இரு சிறகு (1983)
  9. திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
  10. நந்தவனநாட்கள் (1985)
  11. இதயத்தில் நாற்காலி (1985)
  12. என்னுடையபோதிமரங்கள் (1987)
  13. கனவுக்குதிரைகள் (1992)
  14. கம்பன் கவியரங்கில் (1993)
  15. என் பிள்ளைத் தமிழ் (1994)
  16. ஒற்றைத் தீக்குச்சி (1997)
  17. மனிதனைத்தேடி (1998)
  18. ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
  19. மு.மேத்தா கவிதைகள் (2007)
  20. கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
  21. கனவுகளின்கையெழுத்து (2016)
  22. நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)
கட்டுரை
  1. திறந்த புத்தகம்
நாவல்கள்
  1. சோழ நிலா
  2. மகுடநிலா
சிறுகதை
  • கிழித்த கோடு
  • மு.மேத்தா சிறுகதைகள்
  • பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.