under review

முசுண்டை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 6: Line 6:
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்]
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU3k0py.TVA_BOK_0006573/mode/2up சங்ககால அரசர் வரலாறு: தஞ்சைப் பல்கலைக்கழகம்: முனைவர் வ. குருநாதன்]


{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 02:33, 16 November 2023

முசுண்டை (அரசன்) சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல். வேம்பி என்ற நாட்டை ஆட்சி செய்தவன்.

வாழ்க்கைக்குறிப்பு

முசுண்டை என்ற அரசன் பற்றிய செய்திகள் அகநானூற்றில் 249-ஆவது பாடலில் உள்ளன. வேம்பி என்ற நாட்டைச் சேர்ந்தவன். முசுண்டை வள்ளல் குணமுடையவன். வேம்பினைக் காவல் மரமாகவும், வேப்பம் பூவை அடையாள மரமாகவும் கொண்ட பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட சிறிய நாட்டை ஆண்டவன். பல்வேல் முசுண்டை என்று வழங்கப் பெறுவதால் படைவலிமை உடையவன் என அறிய முடிகிறது. கிணையிசை முழக்கி வாழும் அகவுநர், கூத்தர் வந்து கேட்டால் ஏறினங்களையும், நெல் முதலிய தானியங்களை முன்னே கொடுத்து, களிறுகளோடே தேர்களைப் பின்னே கொடுக்கும் தன்மையன். தந்தங்களுக்குப் பொன்னணி பூட்டிய யானைகளை ஊற்றுநீர் சுரப்பது போல் வழங்குவான். சீறூர் மன்னர்களில் ஒருவன்.

இணைப்புகள்


✅Finalised Page