துயிலெடை நிலை: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 8: | Line 8: | ||
பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் திருப்பள்ளியெழுச்சி வழக்கம் ஏற்பட்டதுடன், மன்னர்களுக்கான தனியான ஒரு சிற்றிலக்கியமாக துயிலெடை நிலை உருவானது. | பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் திருப்பள்ளியெழுச்சி வழக்கம் ஏற்பட்டதுடன், மன்னர்களுக்கான தனியான ஒரு சிற்றிலக்கியமாக துயிலெடை நிலை உருவானது. | ||
"உறக்கத்திலிருப்பவர்கள் துயிலெழும்போது நல்ல சொற்கள் காதில் விழுமே யானால், மனம், பொறி, புலன் ஆகியவை நற்பணி செய்ய இச்சொற்கள் தூண்டுகோலாக அமையும். உறங்குவதற்குச் சில விநாடிகள் முன்னர், மனத்தில் என்ன எண்ணம் நிலவியதோ, அதுவே விழித்தவுடன் முதல் எண்ணமாக வரும் என மனவியலார் கூறுகின்றனர். பழங்கால மன்னர்கள் பெரும்பாலும் கேளிக்கைகளில் பெரும் பொழுதைப் போக்கினர் ஆதலின், அந்நிலை யிலேயே உறங்கச் சென்றவர்கள் விடியற்காலையில் சிறந்த | "உறக்கத்திலிருப்பவர்கள் துயிலெழும்போது நல்ல சொற்கள் காதில் விழுமே யானால், மனம், பொறி, புலன் ஆகியவை நற்பணி செய்ய இச்சொற்கள் தூண்டுகோலாக அமையும். உறங்குவதற்குச் சில விநாடிகள் முன்னர், மனத்தில் என்ன எண்ணம் நிலவியதோ, அதுவே விழித்தவுடன் முதல் எண்ணமாக வரும் என மனவியலார் கூறுகின்றனர். பழங்கால மன்னர்கள் பெரும்பாலும் கேளிக்கைகளில் பெரும் பொழுதைப் போக்கினர் ஆதலின், அந்நிலை யிலேயே உறங்கச் சென்றவர்கள் விடியற்காலையில் சிறந்த எண்ணங்களேரடு எழுதல் இயலாத காரியம். அதனாலேயே நம் முன்னேர் சூதர்' என்ற பெயருடைய தனிக்குழுவை ஏற்பாடு செய்து, அரசனைத் துயில் எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினர். அரசருடைய நற்செயல்கள், அவர்கள் வெற்றி ஆகியவற்றைப்பற்றி அந்த விடியற்காலை நேரத்தில் சூதர்கள் பாடினர். அதனைக் கேட்டுக் கொண்டே எழுகின்ற மன்னர்தம் மனத்தில் நல்ல எண்ணம் தோன்றும். ஆதலால், இதனைப் பழமையான தொல்காப்பியம் 'சூதர் ஏத்திய துயிலெடை நிலை’ (தொல்-பொருள் 88) என்று குறிப்பிடுகிறது" என்று [[அ.ச.ஞானசம்பந்தன்|அ.ச. ஞானசம்பந்தன்]] 'திருவாசகம்-சில சிந்தனைகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார். | ||
இறைவனை, நிர்க்குணப் பிரம்மமாகக் கொள்ளாமல், தம்முடைய அன்புக்கும் பக்திக்கும் உரிய, தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட துயிலெடை நிலை '[[திருப்பள்ளியெழுச்சி]]' எனப்பட்டது. [[திருப்பள்ளியெழுச்சி (தொண்டரடிப்பொடியாழ்வார்)|தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி]]யும், [[திருப்பள்ளியெழுச்சி (மாணிக்கவாசகர்)|மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி]]யும் இதன் முன்னோடிகள். திருப்பள்ளியெழுச்சி இறைவனைக் குறித்துப் பாடப்படுவதால் அடியவர்கள் பாடுவதாக அமைக்கப்பட்டது. | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009. | * சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009. | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6juh9&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D#book1/ திருவாசகம்-சில சிந்தனைகள்-அ.ச.ஞானசம்பந்தன், தமிழமிணைய மின்னூலகம்] | |||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> |
Revision as of 03:55, 22 August 2023
துயிலெடை நிலை (பள்ளியெழுச்சி ) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவது துயிலெடை நிலை[1]. பக்திக் காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகப் பாடும் திருப்பள்ளியெழுச்சி வழக்கம் ஏற்பட்டதுடன், மன்னர்களுக்கான தனியான ஒரு சிற்றிலக்கியமாக துயிலெடை நிலை உருவானது.
"உறக்கத்திலிருப்பவர்கள் துயிலெழும்போது நல்ல சொற்கள் காதில் விழுமே யானால், மனம், பொறி, புலன் ஆகியவை நற்பணி செய்ய இச்சொற்கள் தூண்டுகோலாக அமையும். உறங்குவதற்குச் சில விநாடிகள் முன்னர், மனத்தில் என்ன எண்ணம் நிலவியதோ, அதுவே விழித்தவுடன் முதல் எண்ணமாக வரும் என மனவியலார் கூறுகின்றனர். பழங்கால மன்னர்கள் பெரும்பாலும் கேளிக்கைகளில் பெரும் பொழுதைப் போக்கினர் ஆதலின், அந்நிலை யிலேயே உறங்கச் சென்றவர்கள் விடியற்காலையில் சிறந்த எண்ணங்களேரடு எழுதல் இயலாத காரியம். அதனாலேயே நம் முன்னேர் சூதர்' என்ற பெயருடைய தனிக்குழுவை ஏற்பாடு செய்து, அரசனைத் துயில் எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினர். அரசருடைய நற்செயல்கள், அவர்கள் வெற்றி ஆகியவற்றைப்பற்றி அந்த விடியற்காலை நேரத்தில் சூதர்கள் பாடினர். அதனைக் கேட்டுக் கொண்டே எழுகின்ற மன்னர்தம் மனத்தில் நல்ல எண்ணம் தோன்றும். ஆதலால், இதனைப் பழமையான தொல்காப்பியம் 'சூதர் ஏத்திய துயிலெடை நிலை’ (தொல்-பொருள் 88) என்று குறிப்பிடுகிறது" என்று அ.ச. ஞானசம்பந்தன் 'திருவாசகம்-சில சிந்தனைகள்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இறைவனை, நிர்க்குணப் பிரம்மமாகக் கொள்ளாமல், தம்முடைய அன்புக்கும் பக்திக்கும் உரிய, தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட துயிலெடை நிலை 'திருப்பள்ளியெழுச்சி' எனப்பட்டது. தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சியும் இதன் முன்னோடிகள். திருப்பள்ளியெழுச்சி இறைவனைக் குறித்துப் பாடப்படுவதால் அடியவர்கள் பாடுவதாக அமைக்கப்பட்டது.
உசாத்துணை
- சுப்பிரமணியன், ச. வே. (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை. 2009.
- திருவாசகம்-சில சிந்தனைகள்-அ.ச.ஞானசம்பந்தன், தமிழமிணைய மின்னூலகம்
அடிக்குறிப்புகள்
- ↑
கண்படை மன்னர் முன்னர்த் தண்பதம்
விடியல் எல்லை இயல்புறச் சொல்லி
தந்த திறையரும் தாராத் திறையரும்
ஏத்தி நின்மொழி கேட்டுஇனிது இங்க
வேண்டினர் இத்துயில் எழுகென விளம்பின்
அதுவே மன்னர் துயில்எடை நிலையே.- பன்னிரு பாட்டியல், பாடல் 324
இதர இணைப்புகள்
✅Finalised Page